அனைவரும் ஜோதிடர் ஆகலாம் எளிதில்! இதனைப் படியுங்கள் முதலில்!!

ஆதி பரம்பொருளாம் நம் சிவ - சக்திக்கும், பராசர மகரிஷிக்கும் ஜோதிடத்தை அனைவரும் மிக எளிதாகப் புரியும் வண்ணம் செய்திட்ட பராசரரின் சீடர் மைத்ரேயர்...
அனைவரும் ஜோதிடர் ஆகலாம் எளிதில்! இதனைப் படியுங்கள் முதலில்!!

1. ஆதி பரம்பொருளாம் நம் சிவ - சக்திக்கும், பராசர மகரிஷிக்கும் ஜோதிடத்தை அனைவரும் மிக எளிதாகப் புரியும் வண்ணம் செய்திட்ட பராசரரின் சீடர் மைத்ரேயர் அவர்களுக்கும், எனது அனைத்து ஜோதிட குருமார்களுக்கும் அவர்களின் பாதம் தொட்டு வணங்கி இக்கட்டுரையைத் துவங்குகிறேன்.

2. இன்றைய கால கட்டத்தில் அனைவரும் நமது வாழ்வில் வரப் போகும் பிரச்னைகளை முன் கூட்டியே அறிய ஆவலாய் தான் உள்ளோம் என்பதில் ஒருவித சந்தேகமும்  இல்லை. இருளில் நமக்குக் கிடைக்கும் ஒளியைப் போன்றது தான் ஜோதிடம் என்பது. 

3. இதற்காகவே, நாம் பல ஜோதிடர்களை அணுகுகிறோம். ஆனால் எப்போதாவது நாம் நம்மை, நம்மில் உள்ள சக்தியை, நம் கர்ம பலன்களால் இப்பிறவியில் அடைவது  எதுவரை என்பதை ஒருதடவையாவது தெரிந்துகொள்ள ஆசையாவது பட்டிருக்கிறோமா என்றால் இல்லை என்பது தான் விடையாக இருக்கும்.

4. இதற்கு விடை கூறும் விதமாகவும், நம்மை /  நமது ஜோதிட திறனை மேலும் வளர்த்துக்கொள்ளும் விதமாகவும் அறிந்துகொள்ளவே இந்தக் கட்டுரை. இரண்டாவது  கருத்து கேட்டறியவும், இவர் நன்றாக சொல்கின்றாராமே என வேறு நபர் சொல்வதை கேட்டுப் பல ஜோதிடர்களின் கருத்துக்களை கேட்க துடிக்கிறோம். ஆனால் விளைவு,  ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகவும், சில முக்கிய கருத்துக்களை ஒரு ஜோதிடர் கூறுகிற கருத்தை வேறு ஒரு ஜோதிடர் கூறாமலும் இருக்கும் போது நாம் மனம்  தளர்கிறோம்.

5. முதலாவதாக நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்ன வென்றால், ஒரு அறைக்குச் சென்று வெளி வரும் இரு நபர்களிடம், தாங்கள் அந்த அறையினுள் கண்ட நான்கு  பொருள்களை கூறுங்கள் என்றால், நிச்சயம் அவர்களால் ஓரிரு பொருள்களை தவிர அனைவரும் ஒன்று போல் நான்கு பொருளையும் கூறமுடியாதென்பது போல் தான் ஜோதிடமும் என்பதனையும்; இதில் ஜோதிடர்களின் திறமையை ஆராய்ச்சி செய்வதில் ஒன்றும் இல்லை எனவும், அனைவரும் முதலில் உணர வேண்டும்.

6. ஏன் எனில் மகரிஷிகளும், மிகப் பெரிய ஜோதிட விற்பன்னர்களும் ஆராய்ந்து வெளிக்கொணர்ந்த ஜோதிட விதிகளைத் தான் அனைத்து ஜோதிடர்களும் பின்பற்றுகின்றனர்.  ஆனால், ஒவ்வொருவரின் தனிப்பட்ட வகையில் ஜோதிட விதிகளைப் புரிதலும், அவர்களின் ஜோதிட அனுபவமும் மட்டும் தான் பலன்களாக வெளிவரும். 

7. மேலும் முதலாவதாக, நமது பிறப்பு குறிப்புகளான பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம், மற்றும் பிறந்த ஊர் இவைகளை சரியாக இருக்கும் பட்சத்தில் பலன்களில்  வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. இந்தப் பாரம்பரிய ஜோதிட முறையில் இது நிச்சயம் தேவையான ஒன்று. இல்லை எனில், பலன்களில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கத்தான்  செய்யும், இதனை அனைவரும் முதலில் உணருதல் அவசியம். 

8. ஆனால் வேறு வகையான ஜோதிட முறைகளான பிரசன்னம், நாடி, கைரேகை போன்றவற்றிற்கு இவ்வளவு துல்லிய எதிர்கால பலன்களை கூற இயலாது என்றே  சொல்ல வேண்டும். அப்போதைய சூழலில் உள்ள அவசர நிகழ்வுகளுக்காகவும், இது நிறைவேறுமா இல்லையா என்ற கருத்துக்களுக்கு உடனடியாகவும் துல்லியமாகவும்  இவைகள் மூலம் தான் அறியமுடியும் என்றால் அது மிகை ஆகாது. 

10. பொதுவாக, நம்மை ஜோதிடர்கள் பிரச்னை உள்ள நேரங்களில் நம்மைச் சோர்வடைய செய்யாமல் ஊக்கப்படுத்தியும், சில சிறு பரிகாரமாக சில கோவில்களுக்குச் சென்று  சிறு பூசைகளையோ, அர்ச்சனை, அபிஷேகங்களைச் செய்ய சொல்லுவர். அப்போது நாம் வரப்போகின்ற அந்த ஆனந்த நாளை எதிர்நோக்கிக் காத்திருப்பதால் மனம்  தைரியத்துடன் விளங்குவதோடு, தற்போது படும் துயரத்தைத் தாங்கும் சக்தியையும் பெற்று சரியாக யோசித்துச் செயல்படுகிற போது நிச்சயம் வெற்றி பெறுவது  உறுதியாகிறது. 

11. நமது கர்ம பலன்களுக்கு ஏற்ப தான் நமது வாழ்க்கை அமைகிறது என்பதை யாவரும் மறந்து விடக்கூடாது. பிச்சைக்குச் செல்லும் ஒருவர் எப்படி தமக்கு கிடைக்கும் திட  மற்றும் திரவ உணவுப் பொருள்களை பெறுவதற்குத் தனி தனியாகப் பாத்திரங்களை வைத்துள்ளானோ அது போலவே நமக்குக் கிடைத்துள்ள உடல் எனும் பிச்சை  பாத்திரத்தையும் கர்ம வினைகளுக்கேற்ற நமது மனம் எனும் பாத்திரமும் நமக்குக் கிடைக்கும் இன்ப துன்பங்களை ஏற்பதற்குத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். 

12. வெகு சுலபமாக, ஒரு ஜாதகரின் நிலையை, அவர் எதிர்கொள்ள இருக்கும் சூழல்களை பாமரரும் மிக எளிமையாக அறியும் வண்ணம் பராசரரின் சீடர் மைத்ரேயர் நமது  சார்பாக பராசரரிடம் கேட்டு வெளிக்கொணர்ந்த சர்வாஷ்டகம் முறையில் எளிய மற்றும் துல்லியமான வகையில் பலன்களை அறியமுடியும் என்றால் அது மிகை ஆகாது.  இதனை அனைவரும் நீங்களாகவே அறிந்துகொண்டால், மிகவும் நல்லது என இந்தக் கட்டுரை படித்ததும் அறிவீர்கள். 

13. அதன் மூலம் அறியும் கருத்துக்களை புரிந்து கொண்டால், உங்களுக்கு முன் எச்சரிக்கையாய் கொண்டு எதிர் வரும் பிரச்னைகளில் இருந்து வெளி வரவும், அதனை  எதிர்கொள்ளவும், திட மனதைக் கொண்டு எதிர் நீச்சல் போடவும் வெற்றி காண முடியும் என்பதை சர்வாஷ்டக முறையால் பலன் காண, வெற்றியடைய ஏதுவாக இருக்கும்.  அது எப்படி அனைவருக்கும் சாத்தியம் என்பதனை இனி அறிவோம். 

14. இன்றைய கால கட்டத்தில் திறன் பேசி (SMART PHONE), இல்லாதவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம். அந்த போனில், கூகிள் பிலே ஸ்டோரில் (GOOGLE PLAY  STORE ) சென்று முதலில் ஆஸ்ட்ரோ சாப்ட்  (ASTRO SOFT) அல்லது ஆஸ்ட்ரோ சேஜ் (ASTRO SAGE) போன்ற இலவச மென்பொருளை உங்கள் ஸ்மார்ட் போனில்  பதிவிறக்கம் செய்து கொண்டு, நான் விளக்கும் படி நீங்களே உங்கள் ஜோதிட பலனை துல்லியமாகக் காண்பீர்கள், இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். பிறகென்ன  நீங்களும் இப்போது ஜோதிடர் தான். அதனைக் கண்டு தங்களைச் சரி செய்து கொண்டால் வெற்றி நிச்சயம் உங்கள் கரங்களில். 

15. அது சரி இந்த வழியில் ஒரு ஜாதகர் என்னென்ன அறிந்து கொள்ளலாம் என அறியும் ஆவல் உங்களுக்கு தற்போதைய கேள்வியாக இருக்கும் என்பதை உணர்கிறேன்.  இதன் மூலம், ஒரு ஜாதகரின், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா இல்லையா, தன்னம்பிக்கை, ஜாதகர் எடுக்கும் முடிவில் நியாயம் இருக்குமா இருக்காதா, சுயமாக  ஊக்கப்படுத்திக்கொள்ளும் நபரா அல்லது வெளியில் இருந்து உதவித் தேடும் நபரா, ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் சம்பாதிக்கும் திறன் கொண்டவரா இல்லையா, அதிக  ஆசை உள்ளவரா அது அனைத்தும் நிறைவேறும் அதிர்ஷ்ட மிக்கவரா, குறைந்த உழைப்பில் அதிக மகிழ்ச்சி பெறும் நபரா, எதிரிகள் உள்ளவரா, நல்ல நண்பர்கள் புடைசூழ
உள்ளவரா, அதிர்ஷ்டசாலியா , பிறந்த இடம் விட்டு வெகு தொலைவில் சென்று வசிக்க வேண்டி வருமா, பூர்வீக சொத்து கிடைக்குமா கிடைக்காதா, இது போல் பல  வினாக்களுக்கு நீங்களே அறிந்து கொண்டால் மனம் நிறைவு பெறுவதோடு, எதிர் வரும் பிரச்னைகளை சமாளிக்க, அல்லது எதிர்க்கத் துணிவு பிறக்கும் என்பதில்  சந்தேகமில்லை. 

16. திருமண நேரம், திருமணம் சொந்தத்திலா அல்லது காதலா, குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா போன்றவற்றை ஜோதிடரின் துணை கொண்டும் மேற்படி  சர்வாஷ்டக முறையில் தேர்ச்சி பெற்றும் தான் இயலும் என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கட்டுரையை கண்டதும், ஜோதிடத்தின் மீது  நம்பிக்கையும் ஜோதிடம் கற்கும் ஆசையும் உங்களுக்கு ஏற்படும் என்றால் அது ஒரு நல்ல முன்னேற்றமே. 

17. இன்னொன்றையும் இக்கட்டுரையில் நான் சொல்ல விரும்புவது ஜோதிடம் என்பது ஒரு எச்சரிக்கை தானே தவிர அதில் உங்களுக்கு சில இயலாத நிலை உள்ளது என  அறிந்ததும் மேற்கொண்டு முயற்சிகளை பல்வேறு வழிகளில் நீங்கள் முயற்சித்து வெற்றி பெற வேண்டுமே அன்றி மூலையில் அமர்ந்து ஓ வென அழுது புலம்ப கூடாது  என்பதற்காகவே இந்தக் கட்டுரை. சர்வாஷ்டக முறைப்படி அனைத்தையும் அறிய முடியும் . 

18. இதில் சிரமப்படும் நபர் நீங்கள் என்றால் சென்னையில் மற்றும் பல பெரு நகரங்களில் நிறைய சிறந்த ஜோதிட பயிற்சி பள்ளிகள் உள்ளன. அங்குச் சென்று பயிலுங்கள்.  நமது ஜனத்தொகைக்கும் ஒவ்வொரு தனி நபர்க்குள்ள பிரச்னைகளையும் காணும்போது இன்னும் நிறைய ஜோதிடர்கள் தேவை தான் என்பதனை உணர முடிகிறது.  உங்களுக்குள் ஜோதிடத்தில் நம்பிக்கையையும், உங்களை நீங்களே ஜோதிடம் மூலம் அறியவுமே இந்தக் கட்டுரை. 

நிறைய பேர் ஜோதிடம் கற்று, இந்த மனிதக் குலத்துக்கு நிறைய உதவ வேண்டுமென இந்தக் கட்டுரை மூலம் உங்களிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

19. இந்த முதல் கட்டுரையில் ஜோதிடம் மூலம் ஒரு ஜாதகர் ஆரோக்கியம் உடையவரா, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவரா? என  சர்வாஷ்டகம் முறையில் அறியக்  கற்றுக்கொள்வோம். மற்றவைகள் அடுத்து வரும் கட்டுரைகளில் காணலாம். முக்கியமான ஒன்று என்னவென்றால் ஆண்டி முதல் அரசன் வரை அனைவருக்கும் இந்த  சர்வாஷ்டக பரல்களின் கூட்டுத் தொகை 337 மட்டும் தான். 

20. முன்பே இலவச ஜோதிட மென்பொருள் பற்றி கூறியிருந்தேன் அல்லவா அதை பதிவிறக்கம் செய்து அதில் உங்களின் பெயர், பிறப்பு தகவல்களை அளியுங்கள்.  உங்களின் லக்கினம் எதுவென அறிந்து அந்த இடத்தை முதல் (1 ஆம் இடம் ) எனக் குறித்துக்கொள்ளுங்கள். பின்னர் நேராக சர்வாஷ்டக வர்க்க கட்டம் எனும் தலைப்பில்  உள்ள கட்டத்திற்கு செல்லவும். அங்குள்ள எண்களை அதே போல் ஒரு கட்டம் போட்டு ஆங்காங்கே எழுதவும். இப்போது நீங்களே பலன் சொல்லப் போகிறீர்கள். எப்படி  என்றால், இதோ ஒரு  ஜாதகர் ஒருவரின் (மாதிரிக்காக) பலனைக் காணலாம். 

மேற்கண்ட ஒரு ஜாதகரின் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி சர்வாஷ்டக முறைப்படி இப்போது அறியலாம். 

22. எந்தெந்த இடங்கள் நோய்க்கானது என்றெல்லாம் தற்போது துவக்க நிலையில் உள்ள நீங்கள் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். அதனை பிறகு காண்போம். தற்போது, லக்கினத்திற்கும் 6-ஆம் இடத்தில் உள்ள சர்வாஷ்டக பரல்களை (ஆங்கிலத்தில் .BENEFIC POINTS ) அதாவது நல்லது செய்யும் புள்ளிகள் மட்டும் எடுத்து தனியாக  எழுதிக்கொள்ளவும். எப்படி எனில் ல / 1  Vs   6  =  32  Vs   26.   லக்னம் அதிக புள்ளிகளை / பரல்களைப் பெற்றிருப்பின் ஜாதகர் அதிக சக்தி பெற்றிருப்பதோடு, அதிக நோய்  எதிர்ப்பு சக்தி மிக்கவர் என்றும் அவருக்கு சாதாரணமாக எந்த நோயும் வராது எனவும் கொள்ளவேண்டும். அதுவே 6 ஆம் இடத்தில் அதிகமான புள்ளிகளை பெற்றிருப்பார்  எனில் அவருக்கு உடலில் குறைவான சக்தி இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி கண்டிப்பாகக்  குறைவாக இருக்கும் என்றும், கொள்ளவேண்டும். அதோடு இப்படிப்பட்ட  ஒருவர், வாழ்நாள் முழுவதும் நோயாளியாகவே இருக்க அதிக வாய்ப்பு உண்டென்பதால் அவரின் உடல் நிலையைச் சரிசெய்து கொள்ள இதன்படி முடியும். மேலும் அதிக  வழக்குகளை  / பஞ்சாயத்துகளை அவர் சந்திக்க வேண்டிவரும் என்பதும் எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்பதையும் அறிய முடியும். 

23. இதுபோல் பல நிகழ்வுகளை, பலன்களை நீங்களே அறியச்செய்வது தான் இந்த சர்வாஷ்டக முறைப்படியான பலன் அறியும் வழி. அடுத்த கட்டுரைகளில் மேலும்  பலவிதமான பலன்களை அறிய உங்களுக்கு முடிந்த வரை எளிமையாகக் கூறவுள்ளேன். தயவு செய்து காத்திருக்கவும். இதனைக் கண்டும் சில இடங்களில் புரியவில்லை  என்றால், என்னைத் தொடர்பு கொண்டால் பதில் அளிக்க இயலும்.

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com