திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தெப்பத்தை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கடந்த 8-ம் தேதி தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் காலை, இரவு சாமி புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாகத் தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தெப்பத்தை வடம் பிடித்து இழுத்தனர்.