திருமலையில் வரும் 21ஆம் தேதி பௌர்ணமி கருடசேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மாதந்தோறும் பௌர்ணமியின்போது திருமலை மாடவீதியில் இரவு நேரத்தில் மலையப்ப சுவாமி வலம் வருவது வழக்கம்.
பிரம்மோற்சவத்தின்போது திருமலைக்கு வந்து கருடசேவையைக் காண முடியாத பக்தர்கள் பௌர்ணமி இரவு நேரங்களில் நடக்கும் கருடசேவையை தரிசித்து வருகின்றனர்.
அதன்படி வரும் 21-ஆம் தேதி தை பௌர்ணமியை முன்னிட்டு அன்றிரவு 7 முதல் 9 மணி வரை மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாடவீதியில் வலம் வர உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.