வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச விழா நாளை தொடக்கம்

வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச விழா நாளை தொடக்கம்

வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

வடலூரில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று சத்திய ஞானசபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 148-வது தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

தைப்பூச திருவிழாவான திங்கட்கிழமை காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 ஆகிய 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. 

விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com