வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வடலூரில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று சத்திய ஞானசபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 148-வது தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தைப்பூச திருவிழாவான திங்கட்கிழமை காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 ஆகிய 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.