ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளை தைத்தேரோட்டம்  

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை காலை நடைபெறுகிறது. 
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளை தைத்தேரோட்டம்  

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை காலை நடைபெறுகிறது. 

ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை மாலை வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திர வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 

திருவிழாவின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். இன்று அதிகாலை 2 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறை சென்றடைந்தார். 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com