ஆண்டாண்டு காலமாய் தை மாதத்தில் வரும் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம். மற்ற மாதங்களில் வரும் பூச நட்சத்திரத்தைவிடத் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம் பல ஆன்மிக அற்புதங்கள் இந்நன்னாளில் நிகழ்ந்திருக்கின்றன.
முருகப்பெருமானை வழிபடும் அதே வேளையில் சிவபெருமானுக்கும் இந்த நாளில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது மேலும் சிறப்பானது. சிவபெருமான் சிதம்பரம் திருத்தலத்தில், வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், முனிவர்களுக்கு ஆனந்த தரிசனத்தைக் காட்டி அருளிய தினம் தைப்பூசம் என்பதால் சிவபெருமானுக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது. தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வதும் மிகுந்த பலனைத் தரும்.
சரி, தை பூசத்திற்கு எப்படி விரதம் இருக்கலாம்?