காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தெப்போற்சவ திருவிழா நேற்று துவங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் மூன்று நாள் தெப்போற்சவம் நடைபெறுவது வழங்கம். அதன்படி நேற்று இரவு 7.00 மணிக்கு தெப்போற்சவ திருவிழா தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் மற்றும் பெருந்தேவி தாயாருடன், அனந்தசரஸ் என அழைக்கப்படும் தெப்ப குளத்தில் பெருமாள் எழுந்தருளினார்.
முதல் நாளான நேற்று தெப்ப குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரண்டாம் நாள் என்பதாம் ஐந்து முறை வலம் வருவார். மூன்றாம் நாளான நாளை ஏழுமுறை தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.