இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரம் (ஜனவரி 25 - ஜனவரி 31) பலன்களை தினமணி ஜோதிடர்..
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரம் (ஜனவரி 25 - ஜனவரி 31) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்கு கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பணவரவிற்குக் குறைவு இருக்காது. சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகலாம். உடல் நலத்தில் மிகவும் அக்கறை தேவை.  

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சுமை அதிகரிக்கும். அவற்றை செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.  

வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலமிது. வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் கடையை சீரமைக்க முயற்சி செய்வீர்கள். விவசாயிகள் நன்கு உழைத்து பொருளீட்டுவீர்கள். நிலங்களை விரிவுப்படுத்தும் எண்ணம் தோன்றும். 

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு சுமாராகத்தான் இருக்கும். அதனால் அவர்களிடம்  நெருங்காமல் இருப்பது உசிதம். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு விருது பெரும் யோகம் உண்டாகும். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். நிதானத்துடன் செயல்படவும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் படிப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்தவும். கோரிக்கைகள் நிறைவேற பெற்றோரைத் தொந்தரவு செய்வதைத் தவிர்க்கவும்.

பரிகாரம்:  புதன்கிழமைகளில் பெருமாள் கோயிலில் தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 25, 26. 

சந்திராஷ்டமம்: 29, 30, 31.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பெரிய திருப்பங்கள் எதையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது.செய்யும் செயல்களை நேர்த்தியாக முடிக்க முயற்சிக்கவும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்புக்கு இடமிராது. குடும்பத் தலைவரின் உடல்நலத்தில் கவனம் தேவை. 

உத்தியோகஸ்தர்களின் செயல்களுக்கு அங்கீகாரமும் கிடைக்கும். இருப்பினும் கவனத்துடனேயே  வேலைகளைச் செய்து வரவும். வியாபாரிகள் உழைத்து பொருளீட்டுவார்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் கடையில் சில திருத்தங்கள் செய்வார்கள்.

விவசாயிகள் அதிகமாக உழைத்து மகசூலைப் பெருக்குவர். புதிய குத்தகைகள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்காது. 

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். எந்த செயலையும் ஆலோசனை செய்து முடிக்கவும். தொண்டர்களை அரவணைக்கவும். 

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே காணப்படும். நிதானத்துடன் செயல்படுவது நல்லது. 
மாணவமணிகள் கடுமையாக உழைத்துப் படிக்கவும். விளையாட்டில் கவனம் தேவை. 

பரிகாரம்: பிரதோஷத்தன்று சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள் 25, 27.

சந்திராஷ்டமம் இல்லை.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பணப்புழக்கம் அதிகரிக்கும்.  கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். உறவினர்கள் உதவ முன்வருவர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சில சமயங்களில் மௌனத்தைக் கடைபிடிப்பது நன்று. 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். மேலதிகாரிகளிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாக முடியும்.  வாடிக்கையாளர்களின் கவனத்தை கவர புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். விவசாயிகளுக்கு லாபகரமான காலமிது. கால்நடைகளால் வருமானம் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். கலைத்துறையினர் கடின முயற்சிகளுக்குப்பிறகு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். 

பெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுகளிலும் கலந்துகொண்டு வெற்றி அடைவீர்கள்.

பரிகாரம்:  ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை சூரியநமஸ்காரம் செய்து வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 26, 27.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.  பிறருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பிறர் பாராட்டும் வகையில் நடந்துகொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் நல்லவிதமாக முடியும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலைமை நிலவும். வாடிக்கையாளர்களைக் கவரும் திட்டங்களில் வெற்றி கிடைக்கும். 

விவசாயிகளுக்கு லாபகரமான நேரமிது. வருமானம் பலவகைகளில் பெருகும். புதிய குத்தகைகளையும் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். அனைவரின் பாராட்டையும் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பர். மாணவமணிகள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவார்கள். விளையாட்டுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்: துர்க்கையையும் பைரவரையும் வணங்கி நலம் பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 25, 28. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

ஜனவரி 25 - ஜனவரி 31
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

சிறு சிறு குழப்பங்கள் ஏற்படலாம். மனதில் சஞ்சலங்கள் தோன்றி அமைதியை இழக்க நேரிடும். அலைச்சல்களும் அதிகரிக்கும். தடைகள் இருப்பினும் இறுதியில் அனைத்தும் சாதகமாக முடியும். பொருளாதார நிலைமை திருப்தி தராது. 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறைந்து காணப்படும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில்  சிரமங்கள் உண்டாகும். நண்பர்களிடம் மனக்கசப்பு ஏற்படும். 

விவசாயிகள் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலனைப் பெறலாம். சிலருக்கு வழக்குகளால் மன உளைச்சல் ஏற்படும். 

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றகரமான சூழ்நிலை அமையாது. மனதில் ஏற்படும் சஞ்சலமும் மேலிடத்தில் அதிருப்தியும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.  
கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும்.  பெண்மணிகள் குடும்பத்தினருடன் ஒற்றுமையோடு நடந்துகொண்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். 

மாணவமணிகள் படிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தினால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 27, 28. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்பட்டாலும் அவற்றைக் கடந்து வந்து விடுவீர்கள். குழப்பங்கள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்களுடன் சிறிய மனக்கசப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது. 
 
உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவாக மேலதிகாரிகள் நடந்து கொள்ளமாட்டார்கள். அவர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சில சிரமங்கள் இருக்கும். நண்பர்களிடம் மனக்கசப்பு உருவாகவும் வாய்ப்புண்டு. விவசாயிகள் கடுமையாக உழைத்தால்தான் முன்னேற்றத்தைக் காணலாம். 

அரசியல்வாதிகளுக்கு திட்டமிட்ட செயல்களில் முன்னேற்றகரமான சூழ்நிலை உருவாகாது. மனதில் ஏற்படும் சஞ்சலமும் மேலிடத்தின் அதிருப்பதியும் குழப்பத்தில் ஆழ்த்தும். 

கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். திட்டமிட்ட வெளியூர் பயணங்களும் தடைபடும். பெண்மணிகள் குடும்பத்தினருடன் ஒற்றுமையோடு நடந்து கொண்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

மாணவமணிகள் படிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தவும்.

பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை தரிசிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 29.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

வீண் அலைச்சல்கள் ஏற்படும். மதிப்பு மரியாதை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள்.  உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 

உத்தியோகஸ்தர்களுக்கு ஏதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் லாபகரமாகவே இருக்கும்.  பொருள்களின் விற்பனை நன்கு நடக்கும். விவசாயிகள் எதிர்பாராத மகசூல் கிடைத்து பொருளாதார முன்னேற்றம் அடைவர். 

அரசியல்வாதிகள் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிவாகை சூடுவார்கள். செல்வாக்கு மளமளவென உயரும். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். வரவேண்டிய தொகையும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான காலமாகவே இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். 

மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோரின் ஆதரவினால் அனைத்தும் பூர்த்தியாகும். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 25, 29. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நடப்பதெல்லாம் நன்மைக்கே. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன்உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பயணங்களால் நன்மை உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். 

உத்தியோகஸ்தர்கள் பதற்றப்படாமல் அலுவலக வேலைகளை அமைதியாகச் செய்யவும். சக ஊழியர்கள் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் சிறப்பாக இருக்கும். கால்நடைகளின் மூலமும் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு சாதகமாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறும் நேரமிது. எனவே யாரையும் நம்பிவிட வேண்டாம். கலைத்துரையினருக்கு சக கலைஞர்களே நல்ல வாய்ப்புகளைத் தேடித் தருவார்கள். செலவு செய்யும்போது கவனமாக இருக்கவும். 

பெண்மணிகள் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கலாம். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 29. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சுமாராகவே இருக்கும். உடல்நலத்திலும் கவனம் செலுத்தவும். திட்டமிட்ட வேலைகள் தட்டுத் தடுமாறிப் போகும். இதனால் வீண் அலைச்சல்களும் மனச்சோர்வும் உண்டாகும்.  உடன்பிறந்தோர் வழியில் நிலவிய மனச்சப்புகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவார்கள்.  சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அனைத்து இடையூறுகளையும் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு புதிய மாற்றம் தென்படும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். விவசாயிகள் அதிகம் உழைக்க வேண்டிருக்கும். இதனால் உடல்நலம் பாதிக்கப்படலாம். 

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளை ஏற்று செயலாற்றுவார்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டையும் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிலுவைத் தொகைகள் கிடைக்கும். பெண்மணிகள் தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். பணவசதி சரளமாக இருக்கும். 

மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் அள்ளுவார்கள். விளையாட்டு கேளிக்கைகளிலும் ஈடுபட்டு மகிழ்வர்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு செய்து  கஷ்டங்களைக் குறைக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 30, 31. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பணவரவு நன்றாக இருந்தாலும் சிறு விரயங்களும் ஏற்படும். மனதில் ஏற்படும் கவலைகளால் மற்ற வேலைகளில் இடையூறுகள் உண்டாகலாம். மனதை ஒருநிலைப்படுத்தும் முயற்களை மேற்கொள்ளவும். 

உத்தியோகஸ்தர்கள் கவனம் சிதறாமல் வேலைகளைப் பட்டியலிட்டு செய்து முடிக்கவும். பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் பணவரவுக்கு குறைவில்லை. 
வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்களின் வருகை அதிகமிருக்கும்.  விவசாயிகளுக்கு மகசூல் குறையும். பயிர்களில் பாதிப்பு உள்ளதால் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவும். 

அரசியல்வாதிகளுக்கு மதிப்பு , மரியாதை உயரும். பலவழிகளிலும் வருமானம் கிடைக்கும். கலைத்துறையினர் பின்தங்கிய நிலையிலிருந்து விடுபடுவார்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் வீண் குழப்பங்களைச் சந்திக்க நேரிடும். ஆகையால் எல்லோரிடமும் அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். பொறுப்புடன் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் "ஜெய ஜெய துர்க்கா' என்று ஜபித்து வரவும். 

அனுகூலமான தினங்கள்: 25, 30. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பெயரும் புகழும் வளரும். உடல் ஆரோக்கியம் பலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். வரவேண்டிய பணம் வந்து சேரும். சுபச்செலவுகளையும் செய்து மகிழ்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு குறையும். மேலதிகாரிகளும் சக ஊழியர்களும் அனுகூலமாகவே நடந்துகொள்வார்கள். வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களின் ஆதரவையும் பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். விவசாய உபகரணங்களை வாங்கி மேலும் முன்னேற்றம் அடைவர். 

அரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவார்கள். புதிய பதவிகளில் அமர்வார்கள். கலைத்துறையினர் மனதிற்கு இனிய புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ரசிகர்களை உற்சாகப்படுத்துவீர்கள். 

பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான காலம். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.  சிலருக்கு வெளிநாடு சென்று படிப்பதற்கும் இடம் கிடைக்கும். 

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 31. 

சந்திராஷ்டமம்: 25, 26.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

கவலைகள் மறைந்து இன்பங்கள் பெருகும். மதிப்பு மரியாதை உயரும். தைரிய ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உள்ளதால் ஆற்றல் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். உறவினர்களிடம் இருந்து எதிர்பாராத ஆதரவு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைக் குறித்த நேரத்தில் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். வியாபாரிகள் யுக்தியுடன் பொருள்களை விற்பனை செய்வார்கள். நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு  கொள்முதல் லாபம் கிடைக்கும். கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த வருமானத்தை அடைவர். 

அரசியல்வாதிகள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பார்கள். உட்கட்சிப் பூசல்களில் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து விடுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வரும். ரசிகர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். கோரிக்கைகள் நிறைவேறும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 26, 31. 

சந்திராஷ்டமம்: 27, 28.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com