திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரமாகி காப்பு கட்டப்பட்டது. சிறப்பு தீபாராதனைக்குப் பின் சுவாமி கோயில் ஆஸ்தான மண்டபத்தை வலம் வந்து திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினார்.
ஊஞ்சல் திருவிழா ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 16 உச்சிகால பூஜை நடைபெறுகிறது. ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.