வரதர் கோயிலில் கோடை உற்சவம் கடந்த ஜூலை 4 -ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, கோடை உற்சவத்தின் 5-ஆம் நாளான இன்று மாலை உற்சவர் வரதருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை செய்யப்படவுள்ளது.
கோடை உற்சவத்தின் நான்காம் நாளான நேற்று, திருக்குடையின் கீழ் பட்டாச்சாரியார்கள் வேதம் முழங்க வரதரும், தாயாரும் கோயில் உள்பிரகாரத்திலிருந்து மேற்கு கோபுர சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், உள்பிரகார சந்நிதிகள் வழியாக கடவுளர்கள் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தபிறகு, கோடை உற்சவத்தில் கலந்துகொண்டு வரதரை வழிபட்டனர்.