திருமலையில் 16-இல் திவ்ய தரிசன டோக்கன் ரத்து

தேவஸ்தானம் அளித்து வரும் திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் ஆகியவற்றுக்கான டோக்கன்கள் வரும் 16-ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளன.


தேவஸ்தானம் அளித்து வரும் திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் ஆகியவற்றுக்கான டோக்கன்கள் வரும் 16-ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளன.
ஏழுமலையான் கோயிலில் வரும் 16-ஆம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற தூய்மைப்படுத்தும் சடங்கு நடத்தப்பட உள்ளது. மேலும் பௌர்ணமி தினமான அன்று மாலை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. எனவே அன்று காலை 5 மணிநேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்படுவதோடு, இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஏழுமலையான் கோயில் மூடப்பட உள்ளது. 
எனவே, நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன், தர்ம தரிசன பக்தர்களுக்கு வழங்கப்படும் நேர ஒதுக்கீடு டோக்கன் ஆகியவை 16-ஆம் தேதி வழங்கப்படாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com