இந்த வாரம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளில் உங்க ராசி இருக்கா?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஜூலை 26 - ஆகஸ்ட் 1) பலன்களை தினமணி ஜோதிடர்..
இந்த வாரம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளில் உங்க ராசி இருக்கா?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஜூலை 26 - ஆகஸ்ட் 1) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் சந்தோஷம் தாண்டவமாடும். சிலருக்கு எதிர்பாராத பயணங்களைச் செய்ய நேரிடும். உடலிலும் மனதிலும்  புதிய உற்சாகம் தோன்றும். திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஆன்மிக சிந்தனை பெரும் மன பலத்தைத் தரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் முன்கூட்டியே செயல்படவும். மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்போடு நடந்து கொண்டால் மேலும் நன்மை அடையலாம்.

வியாபாரிகளுக்கு எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்ளவும். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி லாபத்தைப் பெருக்குவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்தில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். கவனமுடன் செயல்படவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம்.

பெண்மணிகளுக்கு சற்று குழப்பமான நிலைமை தென்படும். எவரிடமும் மனம் திறந்து பேசி வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். விளையாட்டில் உங்கள் ஆர்வம் குறையும்.

பரிகாரம்: செவ்வாயன்று முருகரை தரிசித்து வரவும். கந்தசஷ்டி பாராயணம் உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 27, 28. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் திடீரென்று நடந்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். பிறருக்கு வாக்கு கொடுப்பதையோ முன் ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்கேற்பவே லாபம் கிடைக்கும். புதிய கடன்களை வாங்க வேண்டாம். விவசாயிகளுக்கு கடின முயற்சியில் கொள்முதல் லாபம் கிடைக்கும். பழங்கள், கிழங்குகள் பச்சைக் காய்கறிகளை பயிரிட்டு நலம் பெறலாம். 

அரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களை காண்பார்கள். மேலிடத்தின் பாராட்டைப் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை நடத்த சில தடைகள் ஏற்படலாம்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஆர்வம் கூடும்.  குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். மாணவமணிகள் உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். 

பரிகாரம்: புதனன்று பெருமாளை வணங்கவும். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நன்று. 

அனுகூலமான தினங்கள்: 26, 27.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். விடாமுயற்சியால் வெற்றிவாகை சூடுவீர்கள். நெருங்கியவர்களுடன் விரோதம் உண்டாகும். பேசும் நேரத்தில் கவனம் தேவை. 

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுக நிலைமை தென்படும். அதிக லாபத்தை எதிர்பார்த்து வீண் கடன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டாம்.

விவசாயிகளுக்கு லாபம் குறையும். கூடுதல் வருமானம் பெற ஊடுபயிர் செய்யலாம்.

அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் ஈடுபடுவார்கள். உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும். கடன் வாங்கி பணிகள் செய்வதைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் கிடைக்கும். 

பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். விளையாட்டில் வெற்றி உண்டாகும்.

பரிகாரம்: திங்களன்று பார்வதிதேவியையும் வெள்ளியன்று லலிதா சகஸ்ரநாம பாராயணமும் செய்யலாம். 

அனுகூலமான தினங்கள்: 26, 28.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குழந்தைகளால் பெருமை உண்டு. திறமை பளிச்சிடும். பொருளாதார நிலை சீராக இருக்கும். வாகனங்களில் செல்வோர் கவனமாக இருக்கவும். பூர்வீகச் சொத்துகளில் நிலவி வந்த குழப்பம் விலகி அனுகூலம் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு மனதில் குழப்பங்கள் சூழும். அவசியமான செலவுகளுக்கு கடன் வாங்க நேரிடும். கொடுக்கல் வாங்கல்கள் நலமாக முடியும். விவசாயிகள் குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். செல்வாக்கு அதிகரிக்கும். தேவையில்லாமல் யாருக்கும் அறிவுரை சொல்வதைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் திறமை பளிச்சிடும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். 

பெண்மணிகள் உற்றார் உறவினர்களைச் சந்தித்து உற்சாகமடைவார்கள். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

பரிகாரம்: வெள்ளியன்று மகாலட்சுமியை குத்துவிளக்கேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 29. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பெற்றோர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். தொழிலில் சீரான வளர்ச்சியைக் காண்பீர்கள். உடன்பிறந்தோரிடம் சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் சில சஞ்சலங்கள் உண்டாகும். அலுவலக வேலைகளில் பொறுமையுடனும் நிதானத்துடனும் நடந்து கொள்வீர்கள்.

வியாபாரிகள் புதிய கிளைகளைத் திறப்பார்கள். தொழிலில் திருப்பங்கள் ஏற்படும். 

விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் அதிகரிக்கும். புதிய குத்தகைகள் நாடி வரும்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தள்ளிவைக்கவும். கோரிக்கைகளை தலைமையிடம் கூறிவிட்டு அமைதி காக்கவும். 

கலைத்துறையினர் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். இந்த காலகட்டத்தில் தீர ஆலோசித்த பின்பே புதிய ஒப்பந்தங்கள் செய்யவும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் தினமும் நன்றாகப் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவார்கள். விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றிப் பெறுவீர்கள். 

பரிகாரம்: செவ்வாய், வெள்ளியன்று துர்க்கையை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 26, 29. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

புதிய நட்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் சீரிய முன்னேற்றம் தென்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புண்டாகும். சில நேரங்களில் விரயமும் உண்டாகலாம். எதிர்கால கனவுகள் பூர்த்தியாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்தவும். காலநேரங்களை வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ளவும்.

வியாபாரிகள் வரவு} செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். தேவைக்கேற்ப சரக்குகளை வாங்கி விற்பனை செய்யவும். விவசாயிகளுக்கு வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீர்வளத்தால் மகசூலைப் பெருக்கிக் கொள்வார்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். உங்களைத்தேடி புதிய பதவிகளும் வரும். எதிரிகள் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். கலைத்துறையினர் தொழிலில் அபிவிருத்தி காண்பார்கள்.

பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லவும். யாரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மாணவமணிகள் படிப்பில் அக்கறை செலுத்தவும். விளையாட்டுகளில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும். நண்பர்களுடன் கவனமாகப் பழகவும்.

பரிகாரம்: புதனன்று பெருமாளை தரிசிக்கவும். சனியன்று சனீஸ்வரரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 27, 30. 

சந்திராஷ்டமம்:  26.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்படும். கையிலுள்ள பொருள்களை இழக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு பிரச்னைகள் ஏற்படும். புதிய வாகனங்கள் வாங்க வேண்டாம். ஆன்மிகவாதிகளுக்கு இது சாதகமான காலமாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஒருவித திகிலான நிலையிலேயே கழியும்.  சிலருக்கு விரும்பத் தகாத இடம் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரிகள் வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். கூட்டாளிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளையும் வாங்கி மகிழ்வார்கள். 

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதி வெற்றி உங்களுக்கே. கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை நன்கு முடித்துக்கொடுத்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். 

பெண்மணிகள் பொருளாதாரத்தில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். உங்கள் கோரிக்கைகளை குடும்பத்தில் அனைவரும் ஏற்பர். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

பரிகாரம்: முருகப்பெருமானை செவ்வாயன்று சஷ்டிக்கவசம் படித்து வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 26, 29. 

சந்திராஷ்டமம்: 27, 28.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

திட்டமிட்ட காரியங்களில் படிப்படியான வெற்றிகளை அடைவீர்கள். சுபச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உற்றார் உறவினர்களிடம் இருந்து எதிர்பாராத உதவியும் அரசாங்கத்தின் ஆதரவும் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் பெறுவார்கள். சக ஊழியர்களும் உதவியாக இருப்பதால் வேலைச்சுமை குறையும். வியாபாரிகளுக்கு எல்லா தடைகளும் நீங்கும். லாபம் பெருகும். கூட்டாளிகள் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விவசாயிகள் உற்பத்திப் பொருள்களால் நல்ல பலனை அடைவார்கள். கால்நடைகளின் மூலம் விவசாயம் பெருகும். 

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை எளிதில் முடித்து வெற்றி பெறுவார்கள். கட்சியில் முக்கியப் பொறுப்புகளையும் பெறுவார்கள். கலைத்துறையினர் செய்யும் விடாமுயற்சிகள், பெரும் வெற்றிகளைக் கொடுக்கும். 

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். செல்வாக்கை உயர்த்திக் கொள்வார்கள். மாணவமணிகள் படிப்பில் சற்றுப் பின்தங்கிய நிலையில் இருப்பார்கள். சீரிய முயற்சி செய்தால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

பரிகாரம்: பெருமாள் தாயாரை வணங்கவும். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யவும்.

அனுகூலமான தினங்கள்: 27, 31.

சந்திராஷ்டமம்: 29,  30.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

எதிர்வரும் இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். பிரச்னைகளில் தெளிவுகள் பிறக்கும். மனதிலுள்ள சஞ்சலங்கள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் எதிர்பார்த்தபடியே நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிலவி வந்த பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு அலைச்சலும் டென்ஷனும் குறையும். வாடிக்கையாளர்கள் உங்களை நோக்கி வருவார்கள்.

விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். பழைய பாக்கிகளும் வசூலாகும். 

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் கவனத்துடன் இருக்கவும். தொண்டர்களிடம் நல்ல விதமாகப் பழகி அவர்களின் உதவியைப் பெறவும். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

பெண்மணிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். அனைவரும் நட்புக்கரம் நீட்டுவார்கள். 

மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டுவார்கள். தைரியத்துடன் விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

பரிகாரம்:  சனிபகவானை சனியன்று தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 29. 

சந்திராஷ்டமம்: 31, 1.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் பெயரும் புகழும் வளரும். உடல் ஆரோக்கியம் பலப்படும். குடும்பத்தில் சுபச் செலவுகள் செய்து மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு குறையும். மேலதிகாரிகளும் சக ஊழியர்களும் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாகவே இருக்கும். பழைய கடன்கள் வசூலாகும். விவசாயிகளுக்கு கொள்முதல் வியாபாரத்தில் சில இடையூறுகள் ஏற்படும். செலவில்லா மாற்றுப் பயிர்களை பயிரிட்டு வருமானம் பெருக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும்.  பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் பாராட்டும். 

கலைத்துறையினர் கடுமையாக உழைக்கவும். அதனால் நல்ல பலனும் கிடைக்கும். பெண்மணிகள் புதிய ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வர். தந்தைவழி உறவினர்களால் பலன் உண்டு. மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் முன்னேறுவார்கள்.  பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு அவசியம். முருகப்பெருமானை செவ்வாயன்று வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 31. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

உங்கள் மதிப்பு மரியாதை உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் தெய்வ வழிபாடுகளும் நடைபெறும். உறவினர்களின் ஆதரவும் சுற்றத்தாரிடம் பெருமையும் பெறுவீர்கள். வருமானம் சீராக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் அனுகூலமான பலன்களைப் பெற்றுத் தரும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை ஒத்திப்போடுங்கள். எவரையும் நம்பி எதையும் பேச வேண்டாம். விவசாயிகள் எதிர்பாராத மகசூல் கிடைத்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவர். கால்நடைகளால் எதிர்பார்த்த பலனும் கிடைக்கும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகளும் தேடிவரும். முக்கிய பயணங்களையும் செய்வீர்கள். கலைத்துறையினர் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள். 

பெண்மணிகளின்  உடல்நலம் பாதிக்கப்படலாம். கணவருடனான பிரச்னைகளைத் தவிர்க்கவும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் காண அதிகமாக உழைக்க வேண்டிவரும். 

பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் விநாயகரையும் தரிசித்து அருள்பெறவும்.  

அனுகூலமான தினங்கள்: 30, 31. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்களை மாற்றியமைத்து வெற்றி அடைவீர்கள். தீயோர் சேர்க்கையை தவிர்க்கவும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை சீராகவே இருக்கும். சிறிய பயணங்களைச் செய்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை நன்கு கவனத்துடன் செய்து முடிக்கவும். மேலதிகாரிகள் சற்று கடுமையாகவே நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் விற்பனையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். கவனமாக இருந்தால் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். விவசாயிகள் பொருள்களின் விற்பனையில் நல்ல லாபம் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் முயற்சிக்கு ஏற்ற பதவி உயர்வைப் பெறுவார்கள். உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப்பணியாற்றுவதால் உங்கள் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு நற்பெயர் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். மாணவமணிகள் ஆசிரியரின் பாராட்டுகளைப் பெறுவர். விளையாட்டில் வெற்றி உண்டு.

பரிகாரம்: வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 31, 1. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com