பழனி அருகே கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
பழனி முருகன் கோயிலைச் சார்ந்த, சண்முகா நதிக்கரையில் அமைந்துள்ள பெரியாவுடையார் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் நேற்று வருஷாபிஷேகத்தை முன்னிட்டு 108 சங்குகளில் புனித நீர் நிரப்பியும் யாகபூஜையும் நடைபெற்றது.
பெரியாவுடையாருக்கு சங்காபிஷேகம் செய்து, அலங்காரம் பூஜை நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் அம்மையும், அப்பனும் உட்பிரகாரத்தை வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.