மழை பெய்யவேண்டி கர்நாடகா மாநிலத்தில் உள்ள சோமேஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ளது இந்த பழமையான சோமேஷ்வர் கோயில். இக்கோயிலில் மழை வேண்டிய வருண யாகம் நடைபெற்றது. அப்போது அர்ச்சகர்கள் பெரிய அண்டாக்களில் நீர் நிரப்பி அதனுள் அமர்ந்து வேத மந்திரங்களை ஓதினர்.
இதுபோன்று ஏற்கெனவே யாகம் செய்து மழை பெய்துள்ளதால், இம்முறையும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த யாகத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.