உங்கள் ராசிப்படி இந்த வாரம் எப்படி அமையப்போகிறது? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஜூன் 14 - ஜூன் 20) பலன்களை தினமணி..
உங்கள் ராசிப்படி இந்த வாரம் எப்படி அமையப்போகிறது? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஜூன் 14 - ஜூன் 20) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) 

நடக்காது என்று நினைத்த காரியங்கள் கைகூடும். ஆனந்தக் கடலில் நீந்துவீர்கள். உடல்நலனைப்பற்றி சற்று கவலைக் கொள்வீர்கள். உடனுக்குடன் மருத்துவரை நாடுவது நல்லது. பொருளாதார நிலைமை ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சியாக வேலைகளைச் செய்யும்படியான சூழல் ஏற்படும். வேலையில் முன்னேறுவதற்கான தடைகள் விலகி எதிலும் வெற்றி ஏற்படும். 

வியாபாரிகளுக்கு முயற்சியின் அளவுக்கு தகுந்த மாதிரியான லாபங்கள் கிடைக்கும்.  புதிய கடன்கள் வாங்கும்போது யோசித்து செயல்படவும். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும். அதனால் புதிதாக குத்தகை எடுக்கும்போது யோசித்து எடுக்கவும்.

அரசியல்வாதிகள் சிறப்பாக பணிபுரிவார்கள். வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவது நல்லதல்ல. எதிரிகளிடம் ஜாக்கிரதையாகப் பழகவும். கலைத்துறையினருக்கு வரவு அதிகரிக்கும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். வீண்வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெரியவர்களின் ஆசியும் அமோகமாக இருக்கும்.

பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் மேற்கொள்ளவும். 

அனுகூலமான தினங்கள்: 14, 17.

சந்திராஷ்டமம்:  15, 16.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

செயல்களை கடமை உணர்ச்சியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவு இராது. வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முயல்வீர்கள். சுபச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். மூத்த சகோதரருடன் சுமுக உறவு நீடிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். அவர்களிடம் உங்களின் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகள் கூட்டாளிகள் சகாயத்தால் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். விவசாயிகள் நல்ல மகசூலைக் காண்பார்கள். புதிய குத்தகைகள் கிடைப்பதில் சில இடையூறுகள் உண்டாகும்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெற்று தங்கள் முயற்சிகளைச் செம்மையாக்குவார்கள். கட்சியில் அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனை வழங்குவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மன நிறைவு அடைவார்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் காண்பார்கள். குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்துவார்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும்.

பரிகாரம்: குருவாயூரப்பனை ஒருமுறை சென்று தரிசித்து வரவும். அனுகூலமான தினங்கள்: 15, 16. சந்திராஷ்டமம்:  17, 18, 19.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேறும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். மனஉறுதி அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் தென்படும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். உடலாரோக்கியம் சிறக்கும். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலகம் சம்பந்தமான பயணங்களைத் தள்ளிப்போடவும். சக ஊழியர்களின் உதவியுடன் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்ளவும். வியாபாரிகள் நன்கு யோசித்தபிறகே முதலீடுகளைச் செய்யவும். கூட்டாளிகளை நம்ப வேண்டாம். விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படும். கால்நடைகள் மூலம் வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வெற்றிகளைக் கொண்டு சேர்க்கும். அவசரமாகச் செய்யும் கட்சி வேலைகளில் இடையூறுகள் உண்டாகும். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வந்து சேரும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சில் நிதானம் தேவை. மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும். விளையாட்டுகளின்போது கவனம் தேவை.

பரிகாரம்: திங்களன்று கணேசரை அருகம்புல் மாலை சாற்றி வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 15, 18.

சந்திராஷ்டமம்:  20.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

முயற்சிகள் அனைத்தும் நல்ல முடிவைத் தரும். சமயோசித புத்தியால் கஷ்டங்களிலிருந்து விடுபடுவீர்கள். தந்தை வழியில் அநாவசியமான செலவுகள் ஏற்பட்டாலும் பொருளாதாரம் சிறக்கும். சிறு தொல்லைகள் கொடுத்து வந்த நண்பர்கள் அடங்குவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் அனுகூலங்களைக் காண்பார்கள். பணவரவு கூடும். மனதில் இலக்கை நிர்ணயித்து உழைத்தால் அதிக பலன் காண்பீர்கள். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களின் வருகையில் மகிழ்ச்சி அடைவார்கள். விவசாயிகள் அரசாங்கத்தின் மூலம் அனுகூலங்களைக் காண்பார்கள். நீர்வரத்தினால் மகசூலைப் பெருக்கிக் கொள்வர்.

அரசியல்வாதிகள் கட்சியில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவார்கள். அதற்கு தொண்டர்கள் ஆதரவு தருவார்கள். கலைத்துறையினர் தங்கள் வேலைகளை நேர்த்தியாகச் செய்து முடிப்பர். ரசிகர்களின்ஆதரவும் முழுமையாகக் கிடைக்கும். 

பெண்மணிகள் அநாவசியச் செலவுகளால் குடும்பத்தில் குழப்பங்களைக் காண்பார்கள். வீண்வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். 

பரிகாரம்: பெருமாள் கோயிலுக்குச் சென்று சக்கரத்தாழ்வாரை தரிசிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 17. 

சந்திராஷ்டமம்:  இல்லை. 

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தினர் ஆதரவு கொடுப்பார்கள். பெயர், புகழ் படிப்படியாக உயரும். பயணங்களால் அனுகூலமான திருப்பங்கள் உண்டு. தீயோர் சேர்க்கையை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 உத்தியோகஸ்தர்களுக்கு  வேலையில் பளு கூடினாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணவரவுக்கும் குறைவிருக்காது. வியாபாரிகள் பல யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வார்கள். புதிய முதலீடுகளைச் செய்வார்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மாற்றுக் கட்சிக்காரர்களும் உங்களை அரவணைத்துச் செல்வார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மன நிம்மதி அடைவார்கள்.

பெண்மணிகள் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். குழந்தைகளுக்கான கடமைகளை செவ்வனே செய்வார்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் அனுகூலமான நிலைமை ஏற்படும்.  மதிப்பெண்கள் அதிகரிக்கும்.

பரிகாரம்:  அம்பாளை தாமரைப்பூக்களால் அர்ச்சித்தல் நலம். அனுகூலமான தினங்கள்: 14, 18. சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். எந்த ஒரு செயலையும் சற்றுகூட தாமதிக்காமல் துணிந்து செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் சாதாரணமாகவே காணப்படும். 

உத்தியோகஸ்தர்கள் உழைப்பிற்குத் தகுந்த ஊதியத்தைப் பெறுவார்கள். விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரித்தாலும் புதிய திட்டங்களால் அனுகூலப் பலனை எதிர்பார்க்க முடியாது. விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபமும் நஷ்டமும் மாறி மாறி வரும். பால் வியாபாரம் செய்பவர்கள் பலனடைவர். 

அரசியல்வாதிகள் அனைவரும் அனுசரித்துச் செல்ல வேண்டும். தொண்டர்களின் நலனில் அக்கறை செலுத்தவும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் பெறுவீர்கள். 

பெண்மணிகள் கணவருடன் சகஜ நிலையில் பழகுவார்கள். தன சேர்க்கை, பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவமணிகள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டிருக்கும்.

பரிகாரம்: தினமும் 108 முறை "நமசிவாய' மந்திரத்தை சொல்லவும். 

அனுகூலமான தினங்கள்: 15, 18.

சந்திராஷ்டமம்:  இல்லை. 

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உறவினர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முனனேற்றமடைவீர்கள். ஆன்மிக தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். எவரையும் பகைத்துக் கொள்ளாமல் பழகவும். 

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை கொடுக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க முனைவீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதலில் சுமாரான லாபமே கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களைத் தேடிச் செல்வீர்கள். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தியில் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்குக்கீழ் வேலை செய்யும் விவசாய ஊழியர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் உத்தரவை நிறைவேற்ற முனைப்புடன் செயல்படுவீர்கள்.தொண்டர்களின் நலனில் அக்கறை செலுத்தவும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த வரவேற்புகளைப் பெறுவார்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.  பிறரிடம் பேசும்போது கவனமாக இருக்கவும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களை அள்ளுவார்கள்.

பரிகாரம்: செந்திலாண்டவரை செவ்வாய்தோறும் வழிடவும். 

அனுகூலமான தினங்கள்: 17, 19. 

சந்திராஷ்டமம்:  இல்லை. 

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

திட்டமிட்ட வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி வந்து சேரும். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். பொருளாதார நிலைமை சீராக இருந்தாலும் வீண் விரயங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. 

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அலுவலக வேலைகளை பதற்றமில்லாமல் செய்யவும். வியாபாரிகள் தடைகளைத் தாண்டி வருமானத்தைப் பெருக்குவார்கள். எந்த முயற்சியையும் கூட்டாளிகளின் ஆலோசனைப் பெற்று செய்யவும். விவசாயிகள் சலிப்பில்லாமல் உழைத்தால் பலனைப் பெறலாம். புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு சுமாராகவே கிடைக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் சக கலைஞர்களிடம் நட்புடன் பழகி விரோத மனப்பான்மையை விட்டொழிக்க மேலும் சிறப்படையலாம். பெண்மணிகள் குடும்பத்தாரிடமும் உறவினர்களிடமும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும். விளையாடும்போது சற்று கவனத்துடன் இருக்கவும். 

பரிகாரம்:  புதன்கிழமையன்று ஸ்ரீ கிருஷ்ணரை கோயிலுக்குச் சென்று வழிடவும். அனுகூலமான தினங்கள்: 14, 19. சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் தென்படும். மதிப்பு மரியாதை உயரும். பயணங்களால் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும்  சுமுகமாக முடியும். இடமாற்றம் குறித்து அச்சம் ஏற்படும். வியாபாரிகளின் பொருள்கள் சந்தையில் கடும் போட்டிகளுக்கு இடையே விற்பனையாகும். விவசாயிகளுக்கு மகசூல் குறைவாக இருக்கும். கடுமையாக உழைத்தால் சிறிது முன்னேற்றம் தென்படும். மாற்றுப் பயிர் உற்பத்தி செய்து பயன்பெறுங்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சிப் பணியில் நாட்டம் குறையும். தொண்டர்களின் ஆதரவும் குறைந்து காணப்படும். மேலிடத்திடம் எச்சரிக்கையாக இருக்கவும். கலைத்துறையினர் அதிக செலவுகள் செய்ய நேரிடும். பெண்மணிகளைத் தேடி மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். பெற்றோரிடம் சுமுகமாக இருக்கவும்.

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிடவும். 

அனுகூலமான தினங்கள்: 15, 20. 

சந்திராஷ்டமம்:  இல்லை. 

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பணவரவு சுமாராக இருக்கும். பெரியோர்களை சந்தித்து உதவிகளைப் பெறுவீர்கள். பெற்றோர் அனுசரணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். சிலருக்கு வாகனங்களுக்கு செலவுசெய்ய வேண்டி வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் விஷயங்களில் சாதகமான சூழ்நிலை தென்படும். வாடிக்கையாளர்களைக் கவரும் திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நல்ல முறையில் அமையும். சிறிய முதலீட்டில் புதிய நிலங்களை வாங்கலாம். 

அரசியல்வாதிகளுக்கு அரசாங்க அதிகாரிகளால் நன்மை கிடைக்கும். முயற்சிகள் பலனளிக்கத் தாமதமாகும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். சிலர் சிறு சுற்றுலா சென்று மகிழ்வர். பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். மாணவமணிகள் அதிக அக்கறையுடன் படித்தால்தான் நலமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

பரிகாரம்: விநாயகரையும் பத்மாவதி தாயாரையும் வழிடவும். 

அனுகூலமான தினங்கள்: 17, 19.

சந்திராஷ்டமம்:  இல்லை.  

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பெயரும் புகழும் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் அனுகூலமான போக்கினால் மகிழ்ச்சி அடைவீர்கள். மூத்த உடன்பிறப்புகள் உதவிக் கரம் நீட்டுவர்.

உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகளிடம் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கும். வியாபாரிகள் கடுமையாக உழைத்து வருவாய் ஈட்டி முக்கிய பிரச்னைகளைச் சமாளிப்பார்கள். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உடல் நலம் சற்று பாதிக்கப்படலாம். கொள்முதலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். முக்கியப் பொறுப்புகளை பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பல நாள்களாக வராமல் இருந்த தொகை உங்கள் கைக்கு வரும். 

பெண்மணிகள் தங்கள் இல்லத்தில் நிலவும் அமைதியான சூழ்நிலையினால் திருப்தியடைவார்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை அள்ளுவார்கள். உடல்
நலமும் நன்றாக இருக்கும்.

பரிகாரம்:  ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 19, 20. 

சந்திராஷ்டமம்:  இல்லை. 

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலில் முன்னேற்றம் தென்படும். இடையிடையே தடைகளும் உண்டாகும். தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலங்களை எதிர்பார்க்க முடியாது. 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச் சுமை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் தொல்லைகளுக்கு ஆளாவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். வியாபாரத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருந்தால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி, வருமானம் பெருகும். கால்நடை பராமரிப்புக்கு செலவு செய்ய வேண்டிவரும். 

அரசியல்வாதிகளின் பொதுச் சேவையில் சற்று தொய்வு ஏற்படும். மாற்றுக் கட்சியினர் உங்களை சிக்கலில் மாட்டி விட நினைப்பர். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். 

பெண்மணிகள் உற்றார் உறவினர்களிடம் அனுசரித்து நடக்கவும். மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்தபடி மதிப்பெண்களைப் பெறுவார்கள். பாடங்களை உடனுக்குடன் படித்து பயிற்சி செய்வது உகந்தது. 

பரிகாரம்: வெள்ளியன்று மகாலட்சுமியை வழிடவும். 

அனுகூலமான தினங்கள்: 18, 20. 

சந்திராஷ்டமம்:  14.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com