செங்கல்பட்டு அருகே உள்ள ஸ்ரீ ஆமோதவல்லி நாயகி சமேத ஸ்ரீ திருநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகாசம்ப்ரோக்ஷணம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
2003-ம் ஆண்டு நடந்த சம்ப்ரோஷணத்திற்குப் பிறகு தற்போது இந்த ஆலயத்தில் ஸ்ரீ துளஸீஸ்வரர் பக்த ஜனசபை என்ற அமைப்பின் மூலம் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 வருடங்கள் கழித்து திருநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணம் கோலாகலமாக நேற்று நடத்தப்பட்டது. இதற்கான யாகசாலை பூஜைகள் ஜூன் 18-ல் ஆரம்பமானது.
இத்திருத்தலத்திற்குச் செல்ல சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து வெண்பாக்கம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்தில் செல்லலாம். ஆட்டோ வசதிகளும் உள்ளது.