விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் வருஷாபிஷேகம்

விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 
விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் வருஷாபிஷேகம்


விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

தொடர்ந்து 7-வது ஆண்டாக வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில் உள்பிரகாரத்தில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு வேத விற்பன்னர்களால் ருத்ர ஹோம மந்திரங்கள் ஓத 1008 சங்குகளுக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. 

அதன்பின்பு, 108 கலசத்தில் புனித நீர் ஊற்றி மூலவரான சொக்கநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரங்களுடன் பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சங்காபிஷேகத்தைக் கண்டுகளித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com