திருமலையில் பெய்த கனமழையால் வாடகை அறை வளாகத்திற்குள் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.
திருமலையில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. 3 மணிநேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் திருமலையில் உள்ள தாழ்வான பகுதிகள், கோயில் முன்பகுதி உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கியது. மேலும் வாடகை அறை வளாகங்களின் அடித்தளங்களில் மழைநீர் தேங்கியதால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் முழ்கின.
மேலும் 2 தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால், பக்தர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் திருமலைக்கு வரவேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.