நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஜூலை 1-ல் திருத்தேரோட்டம்

நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு..
நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஜூலை 1-ல் திருத்தேரோட்டம்

நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஜூலை 1-ல் தேரோட்டம் நடைபெறுகிறது. 

பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரத்தில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலில் இந்தாண்டு பிரம்மோற்சவம் கடந்த 24-ம் தேதி அங்குரார்பணத்துடன் நடைபெற்றது. அதையடுத்து நேற்று காலை ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
அதைத்தொடர்ந்து சிம்ம வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. 

இன்று காலை 7.00 மணிக்கு ஹம்ச வாகனத்தில் உற்சவர் வீதி உலாவும், இரவு சூரிய பிரபை வாகனத்திலும், நரசிம்ம பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை காலை கருட சேவை நடைபெறுகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஜூலை 1-ம் தேதி காலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com