இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது? வாங்க பார்க்கலாம்!

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஜூன் 28 - ஜூலை 4) பலன்களை தினமணி ஜோதிடர்
இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது? வாங்க பார்க்கலாம்!

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஜூன் 28 - ஜூலை 4) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

செய்யும் தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவீர்கள். வளர்ச்சி அடைவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். சுபச் செய்திகளைக் கேட்பீர்கள். ஆடம்பரச் செலவுகள் செய்வீர்கள். பண விஷயங்களில் நண்பர்களிடம் ஏற்படும் மனக்கசப்பைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்கள் நினைத்த காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். வரவேண்டிய பணம் அனைத்தும் வந்து சேரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிறு முதலீடுகளைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகளுக்கு அதிக உழைப்பால் நல்ல மகசூலைக் காண்பீர்கள். உழைப்பால் தகுந்த முன்னேற்றங்கள் தேடி வரும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை உயரும். தொண்டர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். வீண் யோசனைகள் உங்கள் வலிமையை குறைக்கும். மாணவமணிகள் படிப்பில் கவனமாக இருக்கவேண்டும். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

பரிகாரம்: செவ்வாயன்று செந்திலாண்டவரை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 29.  

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் பாக்கியம் கிட்டும். பொருளாதாரத்தில் சிறப்பான மேம்பாடு அடைவீர்கள். பழைய கடன்களை திருப்பி அடைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணிகளில் முன்கூட்டியே செயல்பட்டால் வீண் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவார்கள். புதிய முதலீடுகள் செய்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். எனினும் கோதுமை உற்பத்தி செய்யும் விவசாயிகள் குறைவான பலன்களைக் காண்பர். 

அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். கலைத்துறையினருக்கு விழிப்புணர்வுடன் நடந்து கொண்டால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம். பெண்மணிகள் தங்கள் சேமிப்பை எடுத்து செலவு செய்ய நேரிடும். மாணவமணிகள் படிப்பில் கவனம் தேவை. பாடங்களை உடனுக்குடன் படித்து மனதில் நிறுத்தவும். 

பரிகாரம்: ராம பக்த ஆஞ்சநேயரை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 30.  

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் மதிப்பு உயரும். அனுகூலமான பயணங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் சுபிட்சங்கள் கூடும்.  இதனால் சில தெய்வ காரியங்களுக்குச் செலவு செய்து பெருமையடைவீர்கள். உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி, நட்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் பெரிய சந்தைகளை நாடிச் சென்று, வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். புதிய வியாபார முயற்சிகளை ஒத்தி வைக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் மந்தமாக இருக்கும். புதிய கழனிகளை குத்தகைக்கு எடுக்க வேண்டாம். 

அரசியல்வாதிகளுக்கு சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் பெயரும் புகழும் உயரும். வதந்திகளை நம்பி உங்கள் செயல்களை மாற்ற வேண்டாம். 
கலைத்துறையினர் புதிய நண்பர்களால் பயனடைவார்கள். புதிய படைப்புடைகள் உருவாக்க முனைவீர்கள். பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். மேலும் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகளுக்கு உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைக்கும். குறிக்கோளை நோக்கித் தைரியத்துடன் முன்னேறுங்கள்.

பரிகாரம்: சிவபெருமானையும் சனிபகவானையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 30.  

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

செலவுகள் அதிகமாகி வரவுகள் குறையும். மனக் கவலைகளால்  மற்ற வேலைகளில் இடையூறுகள் ஏற்படும். உற்றார், உறவினர்களுடன் முரண்பாடுகள் உண்டாகலாம். பொருளாதாரம் சீராக இருந்தாலும் சிறிய கடன்களும் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். திடீர் இடமாற்றம் உங்களை திக்குமுக்காடச் செய்யும். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் பெறுவீர்கள். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். வரவு செலவுகளைக் கவனமாக செய்யுங்கள். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களில் நல்ல வருமானம் பார்ப்பார்கள். கால்நடைகளால் நன்மையடைவார்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் ஆர்வமாக ஈடுபடுவார்கள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குறையும். சக கலைஞர்களும் உதவமாட்டார்கள். வாய்ப்பாட்டு கலைஞர்களுக்கு இது ஓர் அனுகூலமான காலம். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் கவனம் கூடும். பெற்றோரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்: திங்களன்று பார்வதி பரமேஸ்வரரை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 1.  

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

தற்போது நிலவும் சூழல்களில் மாற்றங்களைக் காண்பீர்கள். மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். உயர்ந்த எண்ணங்களால் சிறப்படைவீர்கள்.  தேக ஆரோக்கியம் வளம் பெற, தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் லாபத்தைக் கொடுக்கும். புதிய முயற்சிகள் ஓரளவுக்கு நல்ல பலனைத் தரும். விவசாயிகளுக்கு மகசூல் குறைவாகவே இருக்கும். புதிய குத்தகைகளால் லாபமிராது என்பதால் அவற்றை தள்ளிப்போடவும்.

அரசியல்வாதிகளுக்கு பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். எதிரிகளும் அடங்கியே நடப்பார்கள். கலைத்துறையினர் செய்த முயற்சிகள் வெற்றி பெறும் ரசிகர்களின் ஆதரவோடு பயன்தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். 

பெண்மணிகளுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள், கணவர் உடல்நலத்தில் சிறு குறைபாடு உண்டாகும். மாணவமணிகள் கடின உழைப்பைக் கூட்டிக் கொள்ளுவது நல்லது.

பரிகாரம்: துர்க்கைக்கு அரளி மலர் சாற்றி தீபமேற்றி வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 30, 1.  

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்டபடி செயல்படுவீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். அனுபவஸ்தர்களைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். உடன்பிறந்தோர் வகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் விட்டுக்கொடுத்து நடக்கவும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பேச்சைக் கேட்டு நடக்கவும். பணவரவு சீராக இருந்தாலும்  கடுமையாக உழைத்துச் சம்பாதிக்க வேண்டிய காலமிது. வியாபாரிகள் கடுமையாக உழைத்து வருவாய் ஈட்டி முக்கிய பிரச்னைகளைச் சமாளித்து விடுவார்கள். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பர். கடுமையாக உழைத்து எதிர்பார்த்த லாபமடைவர். 

அரசியல்வாதிகளைத் தேடி புதிய பொறுப்புகள் வந்து சேரும். எனினும் முக்கிய பிரச்னைகளில் தலையிட வேண்டாம். கலைத்துறையினர் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள். சில சிரமங்களுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். 

பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையாக இருப்பார்கள். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் வருங்காலத்திற்குச் செய்யும் பயிற்சிகள் வெற்றி பெறும். உடல் நலம் நன்றாக இருக்கும்.

பரிகாரம்: புதனன்று பெருமாளையும் சனியன்று சனிபகவானையும் வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 1,  2.  

சந்திராஷ்டமம்:  28, 29.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். செய்தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட காரியங்களை நிதானமாகச் செய்யவும். சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற விற்பனை முறைகளைக் கையாளவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். குறுகிய காலப்பயிர்களைப் பயிர் செய்து பலன் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து சுமுக நிலைமையை உண்டாக்கவும். மாணவமணிகள் படிப்பில் அதிக ஆர்வம் செலுத்தவும். பெற்றோரிடம் கோரிக்கைகளை எடுத்துச் செல்லவேண்டாம்.

பரிகாரம்:  புதனன்று ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 2.  

சந்திராஷ்டமம்:  30, 1.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்களின் தேவைகள் நிறைவேறும். தடைகற்கள் படிக்கற்களாக மாறும். உடன்பிறந்தோர் வகையில் மனக்கசப்புகள் உண்டாகலாம். உங்கள் அந்தஸ்திற்கு குறைவிராது.

உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்பு இருக்கும். சக ஊழியர்களை நம்பி உங்களின் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் நல்ல நிலைமையை காண்பீர்கள். தேவைக்கேற்ப சரக்குகள் வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கொள்முதல் லாபம் தொடரும். பாசன வசதிக்கு  செலவு செய்வீர்கள்.

அரசியல்வாதிகளின் செயல்கள் சாதனைகளாக மாறும். மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் கடின வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். 

கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்து, புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். பெண்மணிகள் ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய மொழிகளைக் கற்க ஆசைப்படுவீர்கள்.

பரிகாரம்:  வெள்ளியன்று அம்பாளுக்கு மாலை சாற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 1, 4.  

சந்திராஷ்டமம்:  2, 3.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உழைப்புக்கேற்ற பலன் கிட்டும். பணவரவில் குறைவு இராது. வீடு, தொழில் மாற்றத்திற்கு இது உகந்த காலம். குடும்பத்தில் அமைதி 
நிலவும். கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரித்தாலும் உழைப்புகேற்ற பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். 

வியாபாரத்தில் முக்கியத் திருப்பங்களை எதிர்பார்க்கலாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய குத்தகைகளின் மூலம் வருமானத்தை அள்ளுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கவனமாக செயல்படவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களும் அதன்மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். வேலைகளில் பொறுப்புடன் நடந்து கொள்ளவும்.

பெண்மணிகள் ஆடை ஆபரணங்கள் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடவும். குடும்பத்தாரிடம் சுமுகமாகப் பழகவும். மாணவமணிகள் தினமும் நன்றாகப் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

பரிகாரம்: சனியன்று திருவேங்கடநாதனையும் சனிபகவானையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 2, 3. 

சந்திராஷ்டமம்:  4.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் கவலையின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். உடல்நலத்திற்காக சிறிது மருத்துவச் செலவுகள் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பதவி உயர்வு பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களோடு நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகள் நண்பர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். எதிர்பார்த்த வங்கிக் கடன்களைப் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பார்வையில் படாமல் சிறப்பாக பணியாற்றுவார்கள். எதிரிகளும் உங்களைக் கண்டு அஞ்சுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களுடன் இணக்கமாக இருப்பீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீண் சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்கவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு கடினமாக உழைக்கவும். 

பரிகாரம்: வியாழனன்று ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 30, 1. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வேலைத் தொந்தரவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் தட்டுத்தடுமாறிப் போகும். வீண் அலைச்சல்களும் உடல் சோர்வும் உண்டாகும். மன உறுதியுடனும் ஆன்மிகச் சிந்தனையாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்து விடுவீர்கள். 
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி சூழும். புதிய முதலீடு செய்வதற்கான யோசனைகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் அதிகம் உழைக்க வேண்டி வரும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். 

அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். தொண்டர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். 

பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியை காண்பார்கள். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவார்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டி வரும்.

பரிகாரம்:  விநாயகரையும் சனீஸ்வரரையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 1, 3.  

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

செல்வாக்கு உயரும். விரக்திகளும் விரயங்களும் நீங்கும். வருவாய் பெருகும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். இறைவழிபாடு அதிகரிக்கும். வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகளும் தென்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டாகும். வேலைகளை திட்டமிட்டுச் செய்யவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான சூழல் தென்படும். கூட்டுத்தொழிலில் எச்சரிக்கை தேவை. விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய கழனிகளை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபச்செலவுகளை செய்து மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் சம்மதத்துடன் காரியங்களில் இறங்கவும். மேலிடத்திற்கு தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையாக இருக்கவும். கலைத்துறையினருக்கு துறையில் உயர்ந்தவர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

பெண்மணிகள் பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம். குடும்பத்தில் சற்று குழப்பமான நிலைமை தென்படுவதால் கவனம் தேவை. மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். 

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்யவும். திருப்பதி வேங்கடாசலபதியை வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 3, 4. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com