ஏழுமலையான் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.2.73 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
புதன்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.73 கோடி கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.38.62 லட்சம் நன்கொடை: புதன்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.34.62 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், சர்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.38.62 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.