மகாசிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய சிறப்பான விரதமாகும். இந்தவிரதம் ஆண்டுதோறும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியன்று கொண்டாடப்படுகிறது.
சிவபெருமானுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்தி என்று வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் அனைத்து சிவராத்திரிகளிலும் சிறப்பானது எனப் புராணங்கள் கூறுகின்றன.
மகா சிவராத்திரியன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம். அந்த நேரத்தில் நாம் மற்ற சிந்தனைகளை மனதில் நிறுத்தாமல் ஒவ்வொரு வினாடியும் சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
சிவராத்திரியன்று விரதம் இருக்கும் முறை, அதன் சூட்சமம் என்ன என்பதைப் பற்றி முழு விடியோவை பார்த்துத் தெரிந்துகொள்வோம்.