காஞ்சிபுரம் அருகே தசபுஜ பைரவர் பிரதிஷ்டை

காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில், கருக்குப்பேட்டைக்கு அருகில் உள்ள நவாஸ்பேட்டையில்,
காஞ்சிபுரம் அருகே தசபுஜ பைரவர் பிரதிஷ்டை


காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில், கருக்குப்பேட்டைக்கு அருகில் உள்ள நவாஸ்பேட்டையில், மிகவும் சிதிலமடைந்த நிலையிலிருந்த  செல்வநாயகி சமேத நவநிதீஸ்வரர் கோயிலில், சென்னையைச் சேர்ந்த "அண்ணாமலையார் அறப்பணிக்குழு" கடந்த 19.02.2017 அன்று உழவாரப்பணி  செய்தனர்.

04.03.2017-ல்  காஞ்சி மடம் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்தார்.  பிறகு சிவலிங்க பாணம் கொடுத்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் பலர் விநாயகர், முருகன், வள்ளி, தேவசேனா, நந்தி, அம்பாள், சண்டிகேஸ்வரர், குபேரன் ஆகிய விக்ரஹங்களைக் கொடுத்து உதவ, பல பல ஆண்டுகளுக்குப் பிறகு, சீரும் சிறப்புமாக நித்திய பூஜையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 71/2 அடி உயரமுள்ள "தசபுஜ பைரவர்" மார்ச் 03, 2019  அன்று இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 
திருக்கழுக்குன்றம் சண்முகநாதன் சிவாச்சாரியார் குழுவினர் பைரவர் பிரதிஷ்டை செய்வித்தனர். அகஸ்தியக்ருபா, திருக்கழுக்குன்றம் ஸ்ரீ அன்பு செழியன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

"ஸ்ரீ செல்வநாயகி உடனுறை ஸ்ரீ நவநிதீஸ்வரர் அறக்கட்டளை" அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

தகவல்: வி. இராமச்சந்திரன்  - 9884080543

ஆலய தொடர்புக்கு: திரு. எஸ். சுகுமார்  9677300562

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com