ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
மாசி அமாவாசையை முன்னிட்டு இக்கோயில் மூலவருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர்களான முத்தாலம்மனுக்கும், பொன்னியம்மனுக்கும் ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. இந்த விழாவில் உபயதாரர் டி.ஜெயபிரகாஷ் மற்றும் ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், கீழ்குப்பம், பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.