ஆற்காடு பாலாற்றங்கரையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மரண பயம் போக்கும் தோப்பு கருப்புசாமி கோயிலில் நான்காம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கருப்புசாமிக்கு சிறப்பு அபிஷேகம் தொடர்ந்து பூக்களால் அலங்காரமும், மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் பூ, பழங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் அடங்கிய சீர்வரிசைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று பூஜை செய்து வழிபட்டனர்.
விழாவில் கோயில் தலைவர் காமராஜர், அண்ணாமலையார் அறக்கட்டளை அறங்காவலர் கு.சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.