ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆதிபிரமோத்ஸவம் எனப்படும் பங்குனித் தேர்த்திருவிழா நாளை (மார்ச் 13) தொடங்குகிறது.
கொடிமரத்துக்கு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் கொடியேற்றம் நடைபெறும். மார்ச் 16-ம் தேதி தங்கக்கருட சேவையும், 21-ம் தேதி பங்குனி உத்திரத்தன்று பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையும், 22-ம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.
தேர்த் திருவிழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.