செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள மாமரத்து சுயம்பு விநாயகர் கோயிலில் கிருத்திகையையொட்டி சுப்பிரமணியருக்கு செவ்வாய்க்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
கூடுவாஞ்சேரி ரயில்நிலையம் அருகில் உள்ள மாமரத்து சுயம்பு வலம்புரி விநாயகர் கோயிலில் கிருத்திகையையொட்டி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுப்பிரமணியரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.