இந்த வாரம் உங்கள் ராசிக்கு சுமாரா? சூப்பரா?.. வாங்க பார்க்கலாம்!

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 15 - மார்ச் 21) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர்..
இந்த வாரம் உங்கள் ராசிக்கு சுமாரா? சூப்பரா?.. வாங்க பார்க்கலாம்!

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 15 - மார்ச் 21) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்படும். கையிலுள்ள பொருள்களை இழக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு பிரச்னைகள் ஏற்படும். புதிய வாகனங்கள் வாங்க வேண்டாம். ஆன்மிகவாதிகளுக்கு இது சாதகமான காலமாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஒருவித திகிலான நிலையிலேயே இந்த காலம் கழியும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் ஏற்படும்.  வியாபாரிகள் வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். கூட்டாளிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளைகளையும் வாங்கி மகிழ்வீர்கள். பாசனத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தவும். 

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதி வெற்றி உங்களுக்கே. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை நன்கு முடித்துக் கொடுத்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்மணிகள் பொருளாதாரத்தில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். கோரிக்கைகளை குடும்பத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 15, 16. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

எதிர்வரும் இடையூறுகள் அனைத்தையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். இதனால் அலுவலக வேலைகளில் சந்தோஷமாக ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வார்கள். விவசாயிகள் தானிய விற்பனையை லாபகரமாகச் செய்து முடிப்பார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபம் காண்பார்கள். 

அரசியல்வாதிகள் புதிய எண்ணங்களைச் செயல்படுத்த தற்போது முயற்சிக்க வேண்டாம். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு அனுகூலம் தரும் திருப்பங்கள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். சிலருக்கு விருது பெறும் யோகமும் உண்டாகும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகமாகும், குடும்பத்தினரிடம் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள்.  மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். 

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவ தரிசனம் உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 15, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

எதிர்வரும் இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். பிரச்னைகளில் தெளிவுகள் றக்கும். மனதிலுள்ள சஞ்சலங்கள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் எதிர்பார்த்தபடியே நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிலவி வந்த பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு அலைச்சலும் டென்ஷனும் குறையும்.  கூட்டுத் தொழில் நன்றாக நடைபெறும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். பழைய பாக்கிகளும் வலசூலாகும். புதிய குத்தகைகளை துணிந்து எடுப்பீர்கள்.  

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் கவனத்துடன் இருக்கவும். தொண்டர்களிடம் நல்ல விதமாகப் பழகி அவர்களின் உதவியைப் பெறவும். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் உங்கள் கையைத் தேடி வரும். 

பெண்மணிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டுவார்கள். தைரியத்துடன் எல்லா விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள்.

பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமான், துர்க்கையை தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 15, 18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தோர் வகையில் நிலவிய மனக்கசப்புகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் பலனடைவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் திருப்திகரமான வருமானம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுலவக வேலைகள் வெற்றிகரமாக முடியும். எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் கடும் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம்.  விவசாயிகளுக்கு லாபமும் நஷ்டமும் மாறி மாறி வரும். கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும். கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். இனிய பயணங்கள் மேற்கொள்வீர்கள்.  பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் தனித்திறமையால் அந்தஸ்து உயரும். 

மாணவமணிகள் கல்வி உயர்வுக்காகச் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். சிலருக்கு கல்வி கற்பதற்கான இடமாற்றமும் கிடைக்கும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர, சுகங்கள் கூடும். 

அனுகூலமான தினங்கள்: 16, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்கள் மதிப்பு மரியாதை உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் செய்வ வழிபாடுகளும் நடைபெறும். உறவினர்களின் ஆதரவு கிடைத்து சுற்றத்தார் மத்தியிலும் பெருமை அடைவீர்கள். வருமானம் சீராக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் அனைத்தும் அனுகூலமான பலன்களைப் பெற்றுத் தரும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை ஒத்திப் போடுவது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். விவசாயிகள் எதிர்பாராத மகசூல் கிடைத்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவர். கால்நடைகளால் எதிர்பார்த்த பலனும் கிடைக்கும்.
 
அரசியல்வாதிகளின்அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் தேடிவரும். மேலிடத்தின் சிபாரிசு கிடைக்கும். கலைத்துறையினர் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். ரசிகர்களின்ஆசைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பெண்மணிகளின் உடல்நலம் பாதிக்கப்படலாம். கணவருடனான பிரச்னைகளைத் தவிர்க்கவும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட அதிகமாக உழைக்க வேண்டும். 

பரிகாரம்: கோயிலுக்குச் சென்று பெருமாள், தாயாரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை , மனஅமைதி, நிம்மதி பூத்துக் குலுங்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வசீகரமான பேச்சினால் பிறரைக் கவர்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உடன்பிறந்தோரை அனுசரித்துச் செல்லவும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை நன்கு திட்டமிட்டு, முன்கூட்டியே செய்யவும். எதிர்பார்த்த சம்பள உயர்வு பெறுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. வியாபாரிகள் துணிந்து முதலீடு செய்து, எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். அனைத்து விஷயங்களையும் சாதகமாக முடிப்பீர்கள். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு பலன் பெறலாம். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். போட்டிகளையும் சந்திக்க நேரிடும். இருப்பினும் மனம் தளராது புதிய வேகத்துடன் ஈடுபடுவீர்கள். 
கலைத்துறையினருக்கு நற்பெயர் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். பெண்மணிகள் மனதில் நிம்மதி பெற, ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவார்கள். குழந்தைகளால் அனுகூலம் உண்டாகும். மாணவமணிகள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவார்கள். 

பரிகாரம்: சனிக்கிழமையில் திருவேங்கடநாதனை தரிசிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 15, 18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். குடும்பத்தில் சிறப்புகள் கூடும். முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றியைத் தேடித் தரும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை உயரும். சகோதர வழியில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். இயந்திரத்தனமான  நடைமுறைகளைக் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரிகள் வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். தேவைக்கேற்ப சரக்குகளை வாங்கி விற்பனை செய்யவும். விவசாயிகள் உழைப்பிற்கேற்ற பலனைப் பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். தானிய விற்பனை லாபம் தரும். 

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சரியாகத் திட்டமிட்டு காரியங்களைச் செய்யவும். 
கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். தந்தை வழி உறவுகள் சுமாராக இருக்கும். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

பரிகாரம்: அம்பாளை வழிபட்டு வர, நன்மைகள் பெருகும். 

அனுகூலமான தினங்கள்: 15, 19. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் செல்வாக்கு குறைந்திருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். சிலருக்கு ஒவ்வாமை, அலர்ஜியும் ஏற்படும். 

உத்தியோகஸ்தர்கள் கவனம் சிதறாமல் வேலைகளைச் செய்து முடிக்கவும். தற்போது பதவி உயர்வை எதிர்பார்க்க முடியாது.  வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சில சிரமங்களை ஏற்படுத்தும். நண்பர்களிடம் மனக்கசப்பு உருவாகலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடாமலிருப்பது நல்லது. விவசாயிகளுக்கு லாபம் குறைவாக இருக்கும். விளைச்சலில் தீவிரமாகக் கவனம் செலுத்தினால் நஷ்டங்களிலிருந்து தப்பிக்கலாம். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினருக்கு தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவமணிகள் கல்வியில் ஈடுபாடு குறையும். எனவே படிப்பில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 17, 20. 

சந்திராஷ்டமம்:  15, 16.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் பலப்படும். உறவினர்கள் உதவிபுரிய முன் வருவார்கள். சுபகாரியங்கள் குடும்பத்தில் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வழக்குகள் நல்லபடியாக முடியும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். சிலருக்கு உத்தியோக விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபகரமான காலமிது. நண்பர்களின் ஒத்துழைப்பு இருப்பதால் புதிய முதலீடுகளில் தைரியமாக ஈடுபடலாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் தொடரும். வாய்க்கால், வரப்பு விஷயங்களில் சாதகமான முடிவைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் அந்தஸ்து உயரும். கலைத்துறையினரின் கனவுகளும் திட்டங்களும் பலிக்கும். தொடர் பணிகளுக்கிடையே சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். பெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் திட்டமிட்ட வேலைகள் யாவையும் செவ்வனே செய்து முடிப்பர். மாணவமணிகளை படிப்பிலும் விளையாட்டிலும் கவனமாக ஈடுபடவும்.  

பரிகாரம்: "நமசிவாய' ஐந்தெழுத்து மந்திரத்தை தியானம் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 20.

சந்திராஷ்டமம்: 17, 18.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் அபிவிருத்தி  ஏற்படும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்களும் சிக்கல்களும் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். பல விதங்களில் ஆதாயம் கிடைக்கும். பெரியோர்களின் ஆசியுடன் திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலைமை தென்படும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். குறிப்பாக கரும்பு விவசாயிகள் கூடுதல் பலனைப் பெறுவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிரிகளின் பலம் அதிகரிப்பதால் சற்று விட்டுக் கொடுத்துச் செயல்படவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களுக்காக விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பிறரிடம் பேசும் நேரத்தில் கவனம் தேவை. 

மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு செல்லவும்.

பரிகாரம்: சிவபெருமானையும் சூரியபகவானையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 17,  21.

சந்திராஷ்டமம்:  19,  20.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பதில் சில சிரமங்கள் ஏற்படும். பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் விரயங்களும் அதிகரிக்கும். பிறருக்கு ஜாமீன் தரவேண்டாம். பயணங்களால் அனுகூலம் இல்லை.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் சற்று பாராமுகமாகவே இருந்து வருவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் வருகையால் விற்பனை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை அதிகமாகும். நிலத்தின் மீதும் போதுமான கவனம் செலுத்தவும்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். புதிய பொறுப்புகளில் கவனத்துடன் செயல்படவும். கலைத்துறையினருக்கு தொழிலில் ஆர்வம் கூடும். புதிய படைப்புகளில் ஈடுபடுவீர்கள். 

பெண்மணிகளுக்கு இல்லத்தில் உற்சாகம் ஏற்படும். பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவார்கள். மாணவமணிகள் படிப்பில் சற்று அதிகக் கவனம் செலுத்தவும். 

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கவும்.

அனுகூலமான தினங்கள்: 19, 20.

சந்திராஷ்டமம்:  21.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும். மனதில் சஞ்சலம் ஏற்படும். இறைவழிபாட்டிலும் பிராணாயாமம், யோகா செய்வதில் கவனம் செலுத்தவும். பயணங்களின்போது எச்சரிக்கை தேவை. 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சிறு பிரச்னைகள் ஏற்படும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருந்து காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாகப் பொருள்களின் தரத்தை மேம்படுத்தவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். புதிய குத்தகைகளை நாடிப் பெறலாம். 

அரசியல்வாதிகள் யோசித்து எடுக்கும். முடிவுகள் அனைத்தும் வெற்றிகளைக் கொடுக்கும். அவசரமாகச் செய்யும் கட்சி வேலைகளில் இடையூறுகளைக் காண்பார்கள். 
கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்மணிகள் கணவரிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். சில விஷயங்களைக் கண்டும் காணாமலும் இருப்பது நல்லது.

மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிப்பீர்கள். நன்கு படித்து மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  20, 21.

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com