சென்னை, கொளத்தூர் சீனிவாச நகரில் உள்ள அருள்மிகு கன்னியம்மன் ஆலயத்தில் 32-ம் ஆண்டு பூச்சொரியல் திருவிழா மார்ச் 20-ம் தேதி நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் ஸ்ரீ கன்னியம்மனுக்கு பூச்சொரியல் திருவிழா நடைபெறும். அந்தவகையில், இந்தாண்டு பங்குனி 6-ம் தேதி, மார்ச் 20-ம் புதன்கிழமையன்று பூச்சொரியல் திருவிழா நடைபெற உள்ளது.
இவ்விழாவில் கலந்துகொள்ள ரூபாய் 250/- இவ்வாலயத்தில் 15.03.19-க்குள் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மனின் அனுக்கிரகத்தை பெற வேண்டுகிறோம்.