வைத்தீஸ்வரன்  கோயிலில் விமரிசையாக நடைபெற்ற பங்குனித் தேரோட்டம்

சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் பங்குனி பிரமோத்ஸவத்தையொட்டி
வைத்தீஸ்வரன்  கோயிலில் விமரிசையாக நடைபெற்ற பங்குனித் தேரோட்டம்

சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் பங்குனி பிரமோத்ஸவத்தையொட்டி, பஞ்சமூர்த்தி சுவாமிகள் தனி, தனியாக இரண்டு தேர்களில் எழுந்தருளிய தேரோட்டம் நேற்று  நடைபெற்றது.

வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள தருமையாதீனத்துக்குச் சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி, தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.

இக்கோயிலில்,  பங்குனி மாத பிரமோத்ஸவ விழா மார்ச் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளையொட்டி நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. 

முன்னதாக கிருத்திகை மண்டபத்தில் விநாயகர், வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக்குமார சுவாமி, அங்காரகன், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 

தொடர்ந்து, பஞ்சமூர்த்தி சுவாமிகள் திருத்தேருக்கு எழுந்தருளியதும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னர் கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார். முதலாவதாக விநாயகர் தேர் புறப்பாடு நடைபெற்றது. 

தொடர்ந்து செல்வமுத்துக்குமார சுவாமி, சுவாமி-அம்மன், அங்காரகன், சண்டிகேசுவரர் சுவாமிகள் எழுந்தருளிய தேரோட்டம் நடைபெற்றது. மேலவீதியில் புறப்பட்ட தேர், வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி வழியாக மீண்டும் பிற்பகலில் மேல் நிலையை அடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com