திருமலை: வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு

திருமலையில் நடந்து வந்த வருடாந்திர தெப்போற்சவம் புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது.  
திருமலை: வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு


திருமலையில் நடந்து வந்த வருடாந்திர தெப்போற்சவம் புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது.  
திருமலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவம் சனிக்கிழமை முதல் நடந்து வருகிறது. அதன் நிறைவு நாளான புதன்கிழமை மாலை திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட இரண்டடுக்கு தெப்பத்தில்,  7 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப ஸ்வாமி தெப்பத்தில் 7 முறை வலம் வந்தார்.  இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளக்கரையில் உள்ள படிகளில் அமர்ந்து தெப்பத்தில் வலம் வந்த உற்சவமூர்த்திகளுக்கு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர்.
 தெப்பத்தில் நாகஸ்வர இசையும், வேதபாராயணமும், பக்திப் பாடல்களும் பாடப்பட்டன. தெப்போற்சவத்தை முன்னிட்டு வசந்தோற்சவம்,  சகஸ்ரதீபாலங்கார சேவை,  ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டன. வருடாந்திர தெப்போற்சவத்தை முன்னிட்டு புதன்கிழமை பௌர்ணமியை ஒட்டி நடைபெறவிருந்த கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com