திருவாரூரில் ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை எதற்காகத் தெரியுமா?

திருவாரூரில் ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை எதற்காகத் தெரியுமா?

திருவாரூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டத் திருவிழா ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் ஏப்.1-ம் தேதி நடைபெறுவதையொட்டி, திருவாரூர் மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஏப்ரல் 20-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. அத்துடன் உள்ளூர் விடுமுறையான ஏப்ரல் 1-ஆம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், மாவட்டத்திலுள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com