சென்னை, அபிராமபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கர குருகுலத்தில் மார்ச் 29 முதல் 31-ம் தேதி வரை ஸ்ரீ ராதாமாதவ விவாக மஹோத்ஸவம் விமரிசையாக நடைபெற உள்ளது.
விவாஹ மஹோத்ஸவம் பாகவத ஸம்ப்ரதாயப்படி பஜனோத்ஸவ பத்ததியில், சுக, வ்யாஸ, வசிஷ்ட, கர்காதி மஹரிஷிகளால் நிச்சயிக்கப்பட்டு உடையாளூர் கல்யாணராம பாகவதர் சீதா கல்யாணம் அஷ்டபதி, ஸ்ரீமதி கல்யாணி மார்க்கபந்து மற்றும் ஞானாந்த மாதர் மண்டலியினரால் நடத்துவதாகப் பக்தர்களால் நிச்சயிக்கப்பட்டு பெரியோர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு சுபமுகூர்த்தம் நடைபெறுகிறது.
மார்ச் 29-ம் தேதி சீதா கல்யாணமும், மார்ச் 30-ம் தேதி அஷ்ட பதி பஜனையும், மார்ச் 31-ம் தேதி ஸ்ரீ ராதா மாதாவ விவாஹ மஹோத்ஸவமும் நடைபெறுகிறது. பக்தர்கள் குடும்ப சமேதராய் வந்து சுபமுகூர்த்தத்தை நடத்திவைத்து திவ்ய தம்பதிகளின் பரிபூரண அனுக்கிரகத்தை பெறலாம்.
விவாக மஹோத்ஸவம் நடைபெறும் தேதி: 31.03.2019
விவாகம் நடைபெறும் இடம்: ஸ்ரீசங்கர குருகுலம், அபிராமபுரம், சென்னை