ஏழுமலையானை அகோபில மடத்தின் பீடாதிபதி தன் சீடர்களுடன் வழிபட்டார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அகோபிலத்தில் லட்சுமிநரசிம்மர் கோயில் அமைந்துள்ளது.
இந்த நகரில் உள்ள அகோபில மடத்தின் பீடாதிபதி சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிக சுவாமிகள் தன் சீடர்களுடன் செவ்வாய்க்கிழமை காலை திருமலைக்கு வந்தார்.
பேடி ஆஞ்சநேயர் கோயில் அருகில் அவருக்கு கோயில் மரியாதையை அளித்து மேள வாத்தியத்துடன் தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு ஏழுமலையானின் பிரசாதங்களை வழங்கினர்.