இந்த வாரம் (மார்ச் 29 - ஏப்ரல் 4) எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னவெல்லாம் நடக்கும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 29 - ஏப்ரல் 4) பலன்களை தினமணி ஜோதிடர்..
இந்த வாரம் (மார்ச் 29 - ஏப்ரல் 4) எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னவெல்லாம் நடக்கும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 29 - ஏப்ரல் 4) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வெற்றிகள் குவியும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுப காரியங்கள் நடக்கும். உடன்பிறந்தோர் வகையில் இருந்த பிணக்குகள் மாறி, சுமுகமான உறவு மலரும். உடல் ஆரோக்கியம் பலப்படும். புதிய முயற்சிகளின்போது தக்கவர்களின் ஆலோசனையை கேட்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். மேலதிகாரிகள் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகள் கவனத்துடன் இருந்தால் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக முடியும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய குத்தகைகளையும் எடுக்க முயற்சிக்கலாம்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் கவனமாக இருக்கவும். தொண்டர்களிடம் நல்லவிதமாகப் பேசிப் பழகி அவர்களின் உதவிகளைப் பெறவும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் பலனடைய முடியும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை நிலவும். 

இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி பெருகும். மாணவ மணிகளுக்கு படிப்பில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியரின் ஆதவும் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் கொடுத்து வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 30. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நட்புகள் உருவாகும். மனச்சோர்வுக்கு ஆளாகாமல் உழைப்பீர்கள். தேக ஆரோக்கியம் பலப்படும். முடிவெடுக்கப்படாமல் இருந்த விஷயங்களில் தெளிவு பிறக்கும். உறவினர்களை அரவணைத்துச் செல்லவும்.

உத்தியோகஸ்தர்கள் இடையூறுகளைச் சமாளித்து வேலைகளை முடிப்பார்கள். பணவரவுக்குத் தடைகளும் இராது. வியாபாரிகள் கடுமையாக உழைப்பார்கள். காலதாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி உங்களைத் தேடி வரும். விவசாயிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, கொள்முதலில் சிறப்பு, குடும்பத்தில் பொறுப்பு போன்றவை உண்டாகும். 

அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கட்சி மேலிடத்தின் ஆதரவு குறைவாக இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். கலைத்துறையினருக்கு தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் அனுசரித்துச் செல்வார்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும். ஞாபகசக்தி வளர, விடியற்காலையில் கல்விக்கான பயற்சிகள் செய்யவும்.

பரிகாரம்: பக்த அனுமனையும், ஹயக்ரீவரையும் தரிசனம் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 30, 31. 

சந்திராஷ்டமம்:  29.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். சிலருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உத்தியோக விஷயமாக வெளியூர் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். வியாபாரிகளுக்கு திட்டமிட்டபடி வருவாய் கிடைக்கும். இருப்பினும் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய குத்தகைகளை நாடிச் செல்லலாம். 

அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய நண்பர்களே இடைஞ்சல் செய்வார்கள். ஆகவே எச்சரிக்கையுடன் இருக்கவும். மாற்றுக் கட்சியினரிடம் மனம் விட்டுப் பேச வேண்டாம். 
கலைத்துறையினர் முக்கிய முடிவுகளைத் தள்ளிப்போடவும். பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவ மணிகள் எதிர்காலத்திற்காகச் செய்யும் பயிற்சிகள் வெற்றிகரமாக அமையும். 

பரிகாரம்: வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 1. 

சந்திராஷ்டமம்:  30, 31.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

சிறு குழப்பங்களை இந்த காலகட்டத்தில் சந்திக்க நேரிடும். முயற்சிகள் நிறைவேறுவதில் சில தடைகள் ஏற்படும். உறவினர்களிடம் மனக்கசப்புகள் தோன்றும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திச் செய்வதில் கடும் முயற்சிகள் எடுக்க வேண்டி வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்களும் ஏற்படலாம். வியாபாரிகள் லாபத்தை அள்ளுவார்கள். சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளிக்கும் தைரியத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் உழைப்பிற்குத் தகுந்த பலனை அடைவதில் தடங்கல்கள் ஏற்படும். குத்தகை எடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.  

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். புதிய முயற்சிகள் வேண்டாம். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும்  கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

பெண்மணிகள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அறியாதவர்களை நம்பி எதையும் கூறவேண்டாம். மாணவ மணிகள் படிப்பில் முழு கவனத்தைச் செலுத்தவும். பெற்றோர் மற்றும்  ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: நடராஜப் பெருமானை வணங்கிவர, நலன்கள் கூடும். 

அனுகூலமான தினங்கள்: 29, 30. 

சந்திராஷ்டமம்:  1, 2, 3.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். திட்டமிட்ட வேலைகளில் வீண் அலைச்சல்கள், அநாவசியச் செலவுகள் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்லவும்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளைக் கவனத்துடன் செய்து முடிக்கவும். பணவரவுக்கு குறைவு வராது.  வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாக இருக்கும். அதிக லாபத்தை எண்ணி வீண் கடன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டாம். விவசாயிகள் அரசிடமிருந்து சில சலுகைகளைப் பெறுவார்கள். புதிய குத்தகைகளைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகளின் திட்டங்கள் யாவும் நிறைவேறும். மாற்றுக் கட்சியினரின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். சமயோசித புத்தியால் நல்ல பெயர் எடுப்பீர்கள். 

கலைத்துறையினர் கடுமையான முயற்சிகளுக்குப்பிறகே புதிய வாய்ப்புகளைப் பெற முடியும். பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.
பிறரிடம் பேசும்போது கவனம் தேவை. மாணவமணிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வியில் சரியான ஈடுபாட்டுடன் இருக்கவும்.

பரிகாரம்: சிறுவாச்சூர் மதுரகாளியம்மனை தரிசனம் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 30, 2. 

சந்திராஷ்டமம்:  4.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். புதிய நட்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் சீரிய முன்னேற்றம் தென்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சூழல் ஏற்படும். சில நேரங்களில் விரயங்களும் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்தவும். காலநேர விரயத்தைத் தவிர்க்கவும். வியாபாரிகள் வரவேண்டிய பண விஷயத்தில் அக்கறை காட்டவும். கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் பழகவும். விவசாயிகள் தாங்கள் நினைத்தபடி வேலைகளை செய்து முடிப்பார்கள். தானிய விற்பனையும் லாபகரமாகவே இருக்கும். 

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். கட்சித் தலைமையின் பார்வையிலிருந்து சற்று விலகியே இருக்கவும். கலைத்துறையினர் உயர்வுகளைக் காண்பார்கள். புதிய ஒப்பந்தங்களை நிறைவேற்றி, வெற்றி நடைபோடுவார்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வார்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு மிகவும் உன்னதம் தரும். 

அனுகூலமான தினங்கள்: 29, 3. 

சந்திராஷ்டமம்:  இல்லை. 

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குதூகலமான காலமிது. எண்ணங்கள் யாவும் ஈடேறும். சில முயற்சிகளில் வெற்றி பெற தடைகள் உண்டாகும். வாகனங்கள் ஓட்டும்போது கவனத்துடன் இருக்கவும். சொந்த வீட்டுக்கு குடிபோகும் பாக்கியம் சிலருக்கு உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொண்டால் பலனடையலாம். வியாபாரிகள் எதிலும் கருத்துடன் செயல்பட்டால் வரவில் சங்கடம் வராது.  பொருள்களை புதிய சந்தைகளில் விற்க முற்படுவீர்கள். விவசாயிகள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் ஆராய்ந்து செயல்பட்டால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் சம்மதத்துடன் செயல்படவும். தொண்டர்களின் ஆதரவு நல்ல முறையிலேயே இருக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்து முடித்தாலும் பணவரவு சிறிது தாமதமாகும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். குடும்பத்தாரிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். 

மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்க பயிற்சிகள் செய்யவும்.

பரிகாரம்: பரமேஸ்வரனை தரிசனம் செய்ய பலன்கள் கூடும்.

அனுகூலமான தினங்கள்:  30, 3. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

செல்வாக்கு கூடும். உடல் ஆரோக்கியம் பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.  வீண் அலைச்சல்கள் ஏற்படாது. வரவேண்டிய பணம் தானாகவே வந்து சேரும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். சுபச்செலவுகள் செய்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு குறையும். மேலதிகாரிகளும் சக ஊழியர்களும் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவீர்கள். 
வியாபாரிகளுக்கு புதிய தொழில்கள் அனுகூலத்தைக் கொடுக்கும். கூட்டாளிகளிடம் கவனத்துடன்  நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை முனைந்து செயல்படுத்துவார்கள். மேலிட ஆதரவால் பதவிகள் தேடிவரும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலனை அடைவார்கள். சக கலைஞர்களின் உதவி கிடைக்கும்.  பெண்மணிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். 

கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவமணிகள் சுறுசுறுப்புடன் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற முயற்சிக்கவும்.

பரிகாரம்: "நமசிவாய' என்று தினமும் 108 முறை ஜபிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 31, 2. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

அனைத்து இடையூறுகளும் விலகி காரிய சித்திகள் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். புகழ், செல்வாக்கு வளரும். உடல் ஆரோக்கியம் அவ்வப்போது குறையும். உணவு விஷயங்களில் எச்சரிக்கை தேவை. பூர்வீகச் சொத்துகளும் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிரமங்கள் குறையும். மேலதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வர். வருமானமும் படிப்படியாக வளரும். வியாபாரிகளுக்கு அரசாங்கத்தில் சில அனுகூலங்கள் உண்டாகும். 

தொழிலில் புதிய மாற்றங்கள் தென்படும். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாக இருக்கும். தானிய விற்பனையை சுறுசுறுப்பாக மேற்கொள்வீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு சகல விஷயங்களிலும் வெற்றி கிட்டும். சமூகத்தில் பெயரும் புகழும் உயரும். தொண்டர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். ரசிகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். குழந்தைகளால் சந்தோஷம் உண்டு. மாணவமணிகள் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் பேச்சைக் கேட்டு நடக்கவும்.

பரிகாரம்: சனீஸ்வரரையும் துர்க்கையையும் வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 1, 4.

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

எதிர்பார்த்த பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். பணம் பலவகையிலும் வரும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு இது சரியான காலமாகும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகளைக் கொடுக்கும். எதிரிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். சிறு இடையூறுகள் தோன்றினாலும் வேலைகள் வெற்றிகரமாக முடியும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். போட்டிகளுக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்வீர்கள். 

விவசாயிகள் கடின உழைப்பால் நற்பலன்கள் பெறலாம். புதிய குத்தகை முயற்சிகளில் தற்போது இறங்க வேண்டாம். 

அரசியல்வாதிகள் தாங்கள் செய்யும் செயல்களில் வெற்றி பெறுவார்கள். கவனத்துடன் செயலாற்றி கட்சித் தலைமையின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள்.

பெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் திட்டமிட்டபடிவேலைகளைச் செவ்வனே செய்வீர்கள். மாணவமணிகளுக்கு உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைக்கும். குறிக்கோளை நோக்கி தைரியத்துடன் முன்னேறுவீர்கள்.

பரிகாரம்:  ராமநாமத்தை முடிந்தபோதெல்லாம் ஜபித்து வரவும். 

அனுகூலமான தினங்கள்: 2, 3.

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். முயற்சிகள் யாவும் வெற்றியைத் தேடித் தரும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழிலில் ஏற்றங்களைக் காண்பீர்கள். குறிக்கோள்களை ஒன்றன்பின் ஒன்றாக  வெற்றியடையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். வேலைகளில் குறைக்காண காத்திருக்கும் மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் பெரிய சந்தைகள் மூலம் விற்பனையை பெருக்கவும். தொழிலில் புதிய முதலீடுகளைச் செய்வதற்கு இது உந்த நேரமல்ல. விவசாயிகளுக்கு மகசூல் பெருகி, லாபம் கிட்டும். கடின உழைப்பால் கூடுதல் விளைச்சலுக்கு வித்திடுவீர்கள். 

அரசியல்வாதிகள் அந்தஸ்தில் சிறிது குறைபாடுகள்  உண்டாகும். தொண்டர்களின் பாராமுகத்தால் கோபமுறாமல்  சீரிய முறையில் செயலாற்றவும். கலைத்துறையினரின் மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். தொழிலில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். குழந்தைகளால் சந்தோஷம் உண்டு. மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு இருக்கும். படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ ரங்கநாதரை வணங்கி வரவும்; காகத்திற்கு அன்னமிடவும். 

அனுகூலமான தினங்கள்: 2, 3. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் மதிப்பு மரியாதை உயரும். தேவைக்கேற்ப உறவினர்கள் உதவுவார்கள். உடன்பிறந்தோர் வகையில் சிறு விரிசல்கள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைச்சுமை குறையும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் இருப்பதால் புதிய முதலீடுகளில் நீங்கள் தைரியமாக ஈடுபடலாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளால் லாபமடைவீர்கள். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வேலைகளில் கண்ணும் கருத்துமாக ஈடுபடவும். முக்கிய வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காதீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் மூலம் நல்லவாய்ப்பு தேடி வரும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சொல்லிக்கொள்ளும்படியாக இருக்காது. மாணவமணிகள் ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவர். 

பரிகாரம்: வெள்ளியன்று கோயிலில் பெருமாள் தாயாரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்:  3, 4.

சந்திராஷ்டமம்:  இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com