திருமலைக்கு கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஏப்ரல் மாதம் வருகை தந்த பக்தர்களின் ஒப்பீட்டு விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலைக்கு வரும் எண்ணிக்கை ஆண்டிற்காண்டு உயர்ந்து வருவதை அறிய தேவஸ்தானம் மாதந்தோறும் ஒப்பீட்டுப் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.
அதில் ஏழுமலையானை தரிசித்தவர்களின் எண்ணிக்கை, அன்னப் பிரசாதம் உண்டவர்களின் எண்ணிக்கை, விற்பனையான லட்டுகளின் எண்ணிக்கை, முடி காணிக்கை வருமானம், உண்டியல் வருமானம் உள்ளிட்டவற்றை கடந்தாண்டுடன் நடப்பாண்டையும் ஒப்பிட்டு கணக்கெடுத்து வருகிறது. அதன்படி கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பீட்டுப் பட்டியலை வெள்ளிக்கிழமை தேவஸ்தானம் வெளியிட்டது.