ஸ்ரீரங்கம் கோயிலில் ராமானுஜரின் திருநட்சத்திர பெருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் உடையவர் சன்னதியில் ஸ்ரீமத் ராமானுஜர் 1002-வது திருநட்சத்திர பெருவிழா கடந்த 7-ம் தேதி தொடங்கியது. நேற்று ராமானுஜரின் 1002-வது திருநட்சத்திர நாளையொட்டி காலை சித்திரை வீதிகளில் உலா வந்தார். பின்னர் ராமானுஜர் சன்னதி முன் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்பு வஸ்திரங்கள் மற்றும் மாலைகளால் ராமானுஜருக்கு உச்சாத்து அலங்காரம் நடைபெற்றது.
அதையடுத்து கோஷ்டி பூஜையும், இரவு பொதுஜன சேவையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகள் அறங்காவல் குழு செய்திருந்தனர்.