நெல்லையப்பர்-காந்திமதி கோயிலில் நாளை வருஷாபிஷேக விழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா (மே14) நடைபெறுகிறது.
நெல்லையப்பர்-காந்திமதி கோயிலில் நாளை வருஷாபிஷேக விழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா (மே14) நடைபெறுகிறது.

இது குறித்து செயல் அலுவலர் பா.ரோஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வருஷாபிசேக விழா செவ்வாக்கிழமை நடைபெற உள்ளது.

காலை 10.30 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8 மணிக்கு சுவாமி மற்றும் அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் நகரத்தில் உள்ள நான்கு ரதவீதிகளிலும் பவனி நடைபெற  உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com