அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் மே 24-ல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா மே 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் மே 24-ல் வைகாசி திருவிழா கொடியேற்றம்


சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா மே 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

சாமிதோப்பிலி அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வைகாசி திருவிழா 24-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  

தினமும் சிறப்புப் பூஜைகளும், இரவு அய்யா வெவ்வேறு வாகனங்களில் பவனியும் நடைபெறுகிறது. வருகிற 31-ம் தேதி எட்டாம் நாள் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

ஜூன் 3-ம் தேதி 11-ம் நாள் திருவிழாவன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com