பெரம்பலூர் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வைகாசி மாத தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.
விழாவையொட்டி, கடந்த 7-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், மே 14-ஆம் தேதி இரவு 12 மணியளவில் பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கும், அதிகாலை 4 மணியளவில் மதுரகாளியம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும், நாள்தோறும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் பரிவார தெய்வங்களுடன் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. சிறுவாச்சூரில் உள்ள பிரதான வீதிகள் வழியே இழுத்துச்செல்லப்படும் திருத்தேர் மீண்டும் இன்று மாலை நிலைக்கு வந்தடைகிறது.