இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்!

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மே 31 - ஜூன் 6) பலன்களை தினமணி ஜோதிடர்
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்!

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மே 31 - ஜூன் 6) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தவிர்க்க முடியாத செலவுகள் உண்டானாலும் அவை சுபச் செலவுகளாகி மகிழ்ச்சியில் ஆழ்த்தும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வழக்குகள் தாமதமாகும். சிலர் உற்றார் உறவினர் நலனில் அக்கறை செலுத்துவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனத்துடன் ஈடுபடவும். மேலதிகாரிகளின் ஆதரவு சுமாராக இருக்கும். வியாபாரிகளுக்கு புதிய மாற்றம் தென்படும். வரவேண்டிய பணம் வசூலாகும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். விவசாயிகள் இந்த காலகட்டத்தில் சரியான முன்னேற்றத்தைக் காண்பது அரிது. கால்நடைகளால் சில நன்மைகளும் உண்டாகும்.

அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். கலைத்துறையினரின் கனவுகள் சில நிஜமாக வாய்ப்புள்ளது. 

பெண்மணிகள் குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் அதிலிருந்து விடுபடுவீர்கள். மாணவமணிகள் தங்கள் வருகாலத்திற்காகச் செய்த பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். அதனால் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: பைரவரையும் துர்க்கையையும் வழிபடவும். 

அனுகூலமான நாள்கள்: 31, 3. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

ரிஷபம்(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். உங்களின் கவலைகள் நீங்கும். அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். எல்லாத் தேவைகளும் பூர்த்தியாகும். சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை குறைந்து காணப்படும்.

உத்தியோகஸ்தர்கள் கவனம் சிதறாமல் வேலைகளைப் பட்டியலிட்டு செய்து முடிக்கவும்.  பதவி உயர்வை எதிர்பார்க்க முடியாது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சில  சிரமங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. விவசாயிகள் உழைப்பிற்கு ஏற்ற பலனை அடைவதில் தடங்கல்கள் ஏற்படும். குத்தகை எடுப்பதைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். இறுக்கமான சூழ்நிலைகளில் இருந்து விடுபட்டு, வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு பல நாள்களாகத் தடைப்பட்டு வந்த செயல்கள் வெற்றியுடன் முடியும். 

பெண்மணிகள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். நீங்கள் செய்யும் வீண் யோசனைகள் வலிமையை குறைக்கும். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளலாம்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வர, சுகங்கள் கூடும். 

அனுகூலமான நாள்கள்: 31, 1. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொறுமையுடன் இருக்க வேண்டிய காலமிது. குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். ஆச்சரியமான செய்திகளைக் கேட்பீர்கள். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். வீண் அச்சத்தை விரட்டி விடுங்கள். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் திருப்திகரமாக முடியும். வியாபாரிகளுக்கு அரசாங்கத்தால் சில அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாக முடியும். 

விவசாயிகளின் உடல் உழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அனைத்தும் தீரும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். உங்களின் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் பாராட்டும். தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். 

கலைத்துறையினருக்கு இது குதூகலமான காலமாகும். ஆடம்பரச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். பெண்மணிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவமணிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

பரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான நாள்கள்: 1, 2.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பணவரவு நன்றாக இருந்தாலும் சிறு விரயங்களும் ஏற்படும். மனதில் உள்ள கவலைகளால் மற்ற வேலைகளில் இடையூறுகள் உண்டாகலாம். மனதை ஒரு நிலைப்படுத்த பிராணாயாமம் செய்யவும். அநாவசியப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் தொல்லைகளுக்கு ஆளாவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு தேவையான பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும்.  புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகள் உழைப்புக்குத் தகுந்த பலனை அடைவதில் சிறு தடங்கல்களைச் சந்திப்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை அமையாது. மனதில் ஏற்படும் சஞ்சலமும் மேலிடத்தின் அதிருப்தியும் குழப்பத்தில் ஆழ்ந்தி விடும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். சக கலைஞர்களிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்ப ஒற்றுமையை பேணிக்காப்பதில் சற்று சிரமப்படுவர். 

குழந்தைகளால் எந்தப் பிரச்னையும் உண்டாகாது. மாணவமணிகள் கல்வியில் முன்கூட்டியே அக்கறை காட்டினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளலாம்.

பரிகாரம்: ஆஞ்சநேயரையும் நவக்கிரகங்களையும் தரிசனம் செய்து வரவும். 

அனுகூலமான நாள்கள்: 1, 4. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் பூர்த்தியாகும். பொருளாதார வளம் பெருகும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வழக்கு விஷயங்கள் சாதகமாகவே  முடியும். உற்றார் உறவினர்கள் அனுசரணையுடன் நடந்து கொள்வர்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாகவே முடியும்.  புதிய முதலீடுகள் வெற்றியைத் தேடித்தரும். விவசாயிகளின் உடல் உழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அனைத்தும் தீரும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் பாராட்டும். தொண்டர்களுக்குத் தேவையான  உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். 

கலைத்துறையிருக்கு இது குதூகலமான காலமாகும். ஆடம்பரச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். பெண்மணிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். மாணவமணிகள் கல்வியில் அதிகக் கவனம் செலுத்துவார்கள். பெரிய சாதனைகளுக்கு அடித்தளம் போடுவீர்கள்.

பரிகாரம்: ஞாயிறன்று சூரியபகவானையும் செவ்வாயன்று துர்க்கையையும் வழிபடவும். 

அனுகூலமான நாள்கள்: 3, 6. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. அறிவு, ஆற்றல் பளிச்சிடும். எடுத்த காரியங்களை எப்படியும் முடித்து விடுவீர்கள். பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு அச்சாரமிடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளு அதிகரிப்பதால்  கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகள் சற்று  கடுமையாகவே நடந்து கொள்வார்கள்.  வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பொருள்களின் விற்பனை நல்ல முறையிலேயே நடக்கும்.

விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைத்து பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். கால்நடைகளாலும் பலன் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் அனைத்துச் செயல்களிலும்  வெற்றிவாகை சூடுவார்கள். தொண்டர்களின் ஆதரவுடன் கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் எண்ணங்கள் ஈடேறும். 
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். வரவேண்டிய பணமும் வந்து சேரும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமையில் சில பாதிப்புகள் ஏற்படும்.  மாணவமணிகள் கல்வியில் முன்னேற அதிகமாக உழைக்கவும். விளையாட்டுகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: சனீஸ்வரரையும் காலபைரவரையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான நாள்கள்: 2, 6.

சந்திராஷ்டமம்: 31, 1.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் நிதானமாகவே நிறைவேறும். சந்தோஷமளிக்கும் செய்திகள் வரும். ஆன்மிக சிந்தனை  வலுபெறும். எடுத்த வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தோர் வழியில் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் திருப்திகரமாக முடியும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம்.  விவசாயப் பணிகளில் சில இடையூறுகள் ஏற்பட்டாலும் அவை விலகி விடும்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தையும் எளிதில் முடித்து வெற்றி பெறுவார்கள். கட்சியில் முக்கியமாக சில பொறுப்புகளைப் பெறுவார்கள். 

கலைத்துறையினர் பல தடைகளைத் தாண்டி, புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பர். தங்கள் செல்வாக்கை உயர்த்திக்கொள்வர். மாணவமணிகள் கடுமையாக முயற்சித்து கல்வியில் முன்னேறுவார்கள்.

பரிகாரம்:  கந்தசஷ்டி கவசம் படித்து முருகரை வழிபடவும். 

அனுகூலமான நாள்கள்: 31, 6. 

சந்திராஷ்டமம்: 2, 3.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

எதிர்வரும் இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். பெரும்பாலும் பல பிரச்னைகளில் தெளிவு ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவு இராது. தந்தை வழிச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்துகொள்வார்கள். பதவி உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகும். முதலீடுகளைச் செய்யும் எண்ணங்கள் மேலோங்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளின் மூலம் நல்ல லாபம் பார்ப்பீர்கள்.

அரசியல்வாதிகள் மீது எதிர்கட்சியினர் வீண் அவதூறுகளைச் சுமத்த நினைப்பார்கள். அதனால் சற்று எச்சரிக்கையுடன் நிலைமைக்குத் தக்கவாறு நடந்து கொள்ளவும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் நற்பலன் அடைய முடியும். 

பெண்மணிகள் மற்றவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்க வேண்டாம். கணவரிடமும் அவர் குடும்பத்தாரிடமும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மாணவமணிகள் கடுமையாக முயற்சித்தால் அதற்கேற்ற பலனை அடையலாம்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

அனுகூலமான நாள்கள்: 2, 3. 

சந்திராஷ்டமம்:  4, 5, 6.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். ஆற்றல் அதிகரிக்கும். உடன்பிறந்தோர் அன்புக்கரம் நீட்டுவர். கவலைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். தைரியத்துடன் எதையும் சாதிக்கும் வல்லமையை பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்தவும். மேலதிகாரிகளின் மூலம் சில சஞ்சலங்கள் ஏற்படும். ஆனாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலைமை உருவாகும். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவார்கள். மகசூல் அதிகரித்து நல்ல லாபத்தைக் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள். தொண்டர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். புதிய பயணங்களால் நன்மை அடைவீர்கள். கலைத்
துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை ஓங்கும். புத்திர வழியில் பூரிப்பும் சந்தோஷமும் உண்டாகும்.  மாணவமணிகள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். நீண்டகால திட்டங்களுக்கு இது உகந்த நேரம்.

பரிகாரம்: பார்வதி} பரமேஸ்வரரை தரிசனம் செய்யவும். 

அனுகூலமான நாள்கள்: 3, 6. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம்(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பணவரவிற்கு ஒன்றும் குறைவு இருக்காது. முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித்தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்; சமுதாயத்தில் மதிப்பு மரியாதை உயரும். உறவினர்களின் ஆதரவு உண்டு. பெற்றோர் வழியில் சோதனைகள் உண்டாகலாம்.

உத்தியோகஸ்தர்கள் பாராட்டுகளைப் பெறுவார்கள். சக ஊழியர்கள் உங்களிடம் பகைமை பாராட்டுவர். அவர்களிடம் எச்சரிக்கை தேவை. வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் சென்று விற்பனையை பெருக்கலாம். விவசாயிகள் புதிய சாதனங்கள் வாங்கி விவசாயத்தைப் பெருக்குவார்கள்.

விவசாயப் பணிகளைச் செய்வதில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவில் வெற்றி உண்டு. 

அரசியல்வாதிகளின் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். மேலிடத்திடம் எதிர்பாராத பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். புதிய சொத்துகளும் சேரும். 

பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையோடு நடந்துகொள்வார்கள். மனதில் காரணமில்லாத குழப்பங்கள் நிலவும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.

பரிகாரம்: புதனன்று பெருமாளை துளசி மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடவும். 

அனுகூலமான நாள்கள்: 2, 3. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் எந்தவிதக் கவலையுமின்றி செயல்படுவீர்கள். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்திலும் ஈடுபடுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் நட்போடு பழகுவார்கள். வியாபாரிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். அந்நியரிடம் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். வரவும் செலவும் சரியாக இருக்கும். 

அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கு எதிரிகள் முட்டுக்கட்டைப் போடுவார்கள். சாதுர்யத்துடன் அவர்களுக்கு பதிலடி கொடுத்து  அதிலிருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் கடின முயற்சிகளுக்குப்பிறகு புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளுக்கு திடீர் செலவுகள் செய்ய நேரிடும். மாணவமணிகளுக்கு உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே விளையாடவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: திங்களன்று விநாயகரையும் சனியன்று சனீஸ்வரரையும் வழிபடவும். 

அனுகூலமான நாள்கள்: 31, 4. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

கவனத்துடன் செயலாற்ற வேண்டிய காலமிது. சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். திட்டமிட்ட வேலைகளில் ஏற்படும் இடையூறுகளைப் பொறுமையுடன் சமாளிக்கவும். கேட்கும் செய்திகள் உங்களுக்குச் சோர்வைக் கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிப்பார்கள். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகள் விழிப்போடு இருந்து வியாபாரத்தைக் கவனிப்பார்கள். போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும். 

விவசாயிகளுக்கு மகசூல் குறைவாகவே இருக்கும். புதிய குத்தகைகள், கால்நடைகளால் பலன் கிடைக்காது.

அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்தில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். கவனமுடன் செயல் படவும். தொண்டர்களை அனுசரித்துச் செல்லவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். ரசிகர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். 

பெண்மணிகள் புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வர். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு மிகவும் கடுமையாக உழைக்கவும். விளையாடும்போது எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: ஆஞ்சநேயரையும் ஹயக்ரீவரையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான நாள்கள்: 5, 6. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com