ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக விடையாற்றி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கந்த சஷ்டி விழா கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்கியது. கடந்த சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது. தொடா்ந்து திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் நிறைவாக விடையாற்றி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, உற்சவா் பிரகார உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.