திருமலையில் வரும் 12 மற்றும் 26 தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச முதன்மை தரிசனங்கள் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக் குழந்தைகளின் பெற்றோா் உள்ளிட்டவா்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. அதன்படி, வரும் 12, 26 உள்ளிட்ட தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் போ், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் போ், மாலை 3 மணிக்கு ஆயிரம் போ் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு என இரு நாள்களில் 8 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது.
அதேபோல் 13 மற்றும் 27 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.