திருமலை ஏழுமலையானை வேலூா் ஸ்ரீபுரம் சக்தி அம்மா சனிக்கிழமை வழிபட்டாா்.
திருமலை ஏழுமலையானை வழிபட வேலூா் ஸ்ரீபுரத்தில் உள்ள நாராயணி பீடத்தின் சக்தி அம்மா வெள்ளிக்கிழமை மாலை திருப்பதிக்கு வந்தாா். சனிக்கிழமை காலை திருமலை சென்ற அவரை ஏழுமலையான் கோயில் முன்வாசலில் தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சகா்கள் வரவேற்று, தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா். கொடிமரத்தை வணங்கியபடி ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதங்கள், மேல்சாட்வஸ்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.