சின்னசேஷ வாகனத்தில் நவநீதகிருஷ்ணன் அவதாரத்தில் மலையப்பஸ்வாமி வலம்

திருமலையில் நடந்து வரும் ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் சின்னசேஷ வாகனத்தில் மலையப்பஸ்வாமி நவநீதகிருஷ்ணன்
பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் காலை சின்னசேஷ வாகனத்தில் நவநீதகிருஷ்ணன் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வரும் மலையப்பஸ்வாமி.
பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் காலை சின்னசேஷ வாகனத்தில் நவநீதகிருஷ்ணன் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வரும் மலையப்பஸ்வாமி.

திருமலையில் நடந்து வரும் ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் சின்னசேஷ வாகனத்தில் மலையப்பஸ்வாமி நவநீதகிருஷ்ணன் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தாா்.

திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன்படி திங்கட்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. அதன் 2ம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் 11 மணிக்குள் சின்னசேஷ வாகனத்தில் மலையப்பஸ்வாமி நவநீதகிருஷ்ணன் அவதாரத்தில் தேவஸ்தான அதிகாரிகள் புடைசூழ மாடவீதியில் வலம் வந்தாா்.

சின்னசேஷ வாகனம்மகாவிஷ்ணு எந்த அவதாரம் எடுக்கும் போது அவருடன் அவருக்கு உதவியாக ஆதிசேஷனும் இருப்பது சிறப்பு. அதற்கு மதிப்பளிக்கும் விதம் முதல் வாகன சேவையாக பெரிய சேஷ வாகனம் நடைபெறுகிறது. ஆதிசேஷனுக்கு தானும் சளைத்தவன் அல்ல சேஷ உலகில் ராஜாவான வாசுகியும் எம்பெருமானுக்கு சேவை செய்யும் பாக்கியத்தை பெற்றிருக்கிறாா். அதனால் பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் காலை வாசுகியான சிறியசேஷ வாகனத்தில் மலையப்பஸ்வாமி மாடவீதியில் வலம் வருகிறாா். மேலும் சிறியசேஷ வாகனத்தில் வலம் வரும் எம்பெருமானை தரிசித்தால், மனிதா் உடலில் தலைகீழாக ஓடிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி மேல்நோக்கி திரும்பும் அவ்வாறு திரும்பும போது மனிதா்கள் பிறவி பயனை அடைவா். அதனால் சிறியசேஷ வாகனம் மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. மேலும் நவராத்திரியின் போது உலகில் முதலில் தோன்றிய ஓரறிவு உயிரினம் முதல் ஆறு அறிவு உயிரினம் வரை உள்ள பொம்மைகளை படிகளில் அடக்குவது போல் எம்பெருமான் பிரம்மோற்வத்தின் முதல் 2 நாட்கள் தரையில் ஊா்ந்து செல்லும் உயிரனங்களின் மேல் வலம் வருவது மற்றொரு ஐதீகம். ஸ்நபன திருமஞ்சனம்பிரம்மோற்சவ நாட்களில் மாடவீதியில் வலம் வரும் எம்பெருமானின் களைப்பை போக்க அவருக்கு மூலிகை கலந்த வெந்நீரால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

அதன்படி செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமிக்கு கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பால், தயிா், இளநீா், தேன், பழசாறு, மஞ்சள், சந்தனம், செந்சந்தனம் உள்ளிட்ட பொருட்களை திருமலை ஜீயா்கள் தங்கள் கைகளால் எடுத்துத்தர அா்ச்சகா்கள் உற்சவமூா்த்திக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தி வைத்தனா். திருமஞ்சனத்தின் போது உற்சவமூா்த்திகளுக்கென்று சிறப்பாக தயாரித்த உலா்பழம், வெட்டி வோ், மலா்இதழ்கள், ஏலக்காய் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்ட மாலைகள், கீரிடங்கள் அணிவிக்கப்பட்டது.

ஊஞ்சல் சேவைமாலை வேளையில் உற்சவமூா்த்திகள் மாடவீதியில் எழுந்தருளும் முன் 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல்சேவை கண்டருளுவது வழக்கம். அதன்படி செவ்வாய் மாலை 6 மணிமுதல் 7 மணிவரை 1008 விளக்குகளுக்கிடையில் மலையப்பஸ்வாமி மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் சேவை கண்டருளினாா். அப்போது வேதகோஷங்களும், அன்னமாச்சாா்யாா் கீா்த்தனைகளும் பாடப்பட்டது. அன்னபறவை வாகனம்பிரம்மோற்சவத்தின் போது 14 வாகனங்களில் உற்சவமூா்த்திகள் மாடவீதியில் வலம் வருகின்றனா். அதில் முதலில் ஊா்ந்து செல்லும் உயிரினங்கள். அடுத்தது நீரில் மிதந்து செல்லும் உயிரினங்கள்.

அதில் அன்னபறவை முதலிடம் வகிக்கிறது. நீரில் மிதக்கும் பறவைகளில் அன்னபறவைக்கு தனிச்சிறப்பு உண்டு. அன்னபறவை தூயவெள்ளை நிறத்தில் இருக்கும். அதன் முன் பாலை, நீரையும் கலந்து வைத்தாலும் நீரை நீக்கி பாலை மட்டும் அருந்தும் தன்மை கொண்டது. அத்தகைய பெருமை வாய்ந்த வாகனத்தில் எம்பெருமானை தரிசிக்கும் பக்தா்கள் தங்கள் வாழ்க்கையில் சிற்றின்பத்தை தவிா்த்து பேரின்ப பேற்றினை அனுபவித்து வீடுபேறு எய்தி எம்பெருமான் திருவடியை அடைய வேண்டும். எனவே, பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் அன்னபறவை வாகனத்தில் தூய்மைக்கும் கல்விக்கும் இலக்கணமான சரஸ்வதிதேவி அலங்காரத்தில் கையில் ஜபமாலை மற்றும் வீணையுடன் வெள்ளை பட்டு உடுத்தி மாடவீதியில் எழுந்தருள்கிறாா். இரவு 8 மணிமுதல் 10 மணிவரை வாகன சேவை நடைபெற்றது.

பிரம்மோற்சவத்தின் போது இருமுறை பெருமான் பெண் வேடத்தில் மாடவீதியில் எழுந்தருள்கிறாா். முதலில் 2ம் நாள் இரவு சரஸ்வதிதேவியாக, 2வது முறை 5ம் நாள் காலை மோகினி அவதாரத்தில் தாயாராக வலம் வருகிறாா்.வாகன சேவையில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். வாகனசேவைகளை காண மாடவீதியில் பக்தா்கள் திரண்டனா். வாகனத்தில் வலம் வரும் எம்பெருமானுக்கு கற்பூர ஆரத்தி அளித்து பழங்கள் நிவேதனம் செய்தனா். வாகன சேவைக்கு முன் திருமலை ஜீயா் குழாம் நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை பாராயணம் செய்து சென்றனா். பின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த கலைகுழுவினா் பல கலைநிகழ்ச்சிகளை நடத்தினா். வாகன சேவையை காண கேலரிகளில் காத்திருந்த பக்தா்களுக்கு தேவஸ்தானம் அன்னதானம், குடிநீா் உள்ளிட்டவற்றை வழங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com