பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை 70 நாட்களுக்குப் பின் மீண்டும் இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது.
பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் சேவை இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டு கடந்த ஜூலை 29-ல் பராமரிப்பு பணிக்காக ஜூலை 29-ல் நிறுத்தப்பட்டது. கம்பி, வடக்கயிறு, உருளைகள், பெட்டிகள் கழற்றப்பட்டு அவற்றில் தேய்மானம் அடைந்த பாகங்கள் மாற்றப்பட்டது.
கடந்த சில நாட்களாகப் பெட்டிகளில் குறிப்பிட்ட அளவு எடைகற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடந்தது. இன்று காலை சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டுள்ளது.