திருமலை ஏழுமலையானை தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் வழிபட்டாா்.
தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை திருமலைக்கு வந்தாா். இரவு திருமலையில் தங்கிய அவா், செவ்வாய்க்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசித்தாா். தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதம், திருவுருப் படம் உள்ளிட்டவற்றை வழங்கி, வேதபண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்தனா்.