ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ஊஞ்சல் திருநாள் விழா வருகிற 16-ம் தேதி தொடங்குகிறது.
ஐப்பசி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை சாற்று மறையாக கொண்டு ஊஞ்சல் திருவிழா 9 நாட்கள் நடைபெறும். கோயிலின் மூன்றாம் திருச்சுற்றான குலசேகரன் திருச்சுற்றில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மாலை வேளையில் இவ்விழா நடைபெறும்.
முக்கிய நிகழ்வான அக்.,24-ம் தேதி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
அக்.24-ம் தேதி விஸ்வரூப தரிசனம் கிடையாது. மேலும், அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
இந்த தகவல்களை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.