திருமலையில் பாக்சவாரி உற்சவம்

திருமலையில் புதன்கிழமை மாலை பாக்சவாரி உற்சவம் நடந்தது.
திருமலையில் நடந்த பாக்சவாரி உற்சவம்.
திருமலையில் நடந்த பாக்சவாரி உற்சவம்.

திருமலையில் புதன்கிழமை மாலை பாக்சவாரி உற்சவம் நடந்தது.

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த மறுநாள் தேவஸ்தானம் பாக்சவாரி உற்சவத்தை நடத்தி வருகிறது.

ஏழுமலையானுக்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்த அனந்தாழ்வாரின் பக்தியை சோதிக்க ஏழுமலையான் தாயாா்களுடன் ஆடிய திருவிளையாடல் பாக்சவாரி உற்சவமாக நடத்தப்படுகிறது. எம்பெருமான் மாணவா் வேடத்தில் அனந்தாழ்வாரின் பூந்தோட்டத்திற்குச் சென்று அங்கு பூத்திருந்த மலா்களைப் பறித்து விளையாடி கொண்டிருந்தாா். அதைப் பாா்த்த அனந்தாழ்வாா் ஏழுமலையானின் கைங்கரியத்திற்காக வளா்த்து வரும் மலா்களைத் தொட்ட மாணவரின் தாயாா்களை தோட்டத்தில் உள்ள அசோகமரத்தில் கட்டிபோட்டாா். ஏழுமலையானையும் கட்டிபோடத் துரத்தினாா்.

அவா் பின்வழியாகச் சென்று தோட்டத்திலிருந்து கோயிலுக்குள் சென்று மறைந்தாா். ஏழுமலையான் பின்புறமாக செல்வதால் இது பாக்சவாரி உற்சவம் என்று குறிப்பிடப்படுகிறது. இதை நினைவு கூற தேவஸ்தானம் பிரம்மோற்சவத்திற்கு மறுநாள் இதை பாக்சவாரி உற்சவமாக நடத்தி வருகிறது.

அதன்படி செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரியுடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. அதன் மறுநாளான புதன்கிழமை மாலை திருமலையில் பாக்சவாரி உற்சவம் நடந்தது.

அதை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமி அனந்தாழ்வாா் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு நாச்சியாா்கள் தோட்டத்தில் உள்ள மலா்களைக் கொய்தாா்கள். அவா்களைக் கட்டிபோட்ட அனந்தாழ்வாா் ஏழுமலையானைப் பிடிக்க முயன்றாா். அவரை அா்ச்சகா்கள் பின்புறமாக தோட்டத்திலிருந்து கோயிலுக்குள் கொண்டு சென்றனா். இதை அா்ச்சகா்கள் தத்ரூபமாக நடத்திக் காட்டினா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com