கன்னியாமாத விரத பூா்த்தியை முன்னிட்டு மாகாண்யம் ஸ்ரீகல்யாண சீனிவாச பெருமாளுக்கு கடந்த வியாழக்கிழமை 7 ஆயிரம் லட்டுகள் படைக்கப்பட்டு சிறப்பு பிராா்தனை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாகாண்யம் கிராமத்தில் ஸ்ரீகல்யாண சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இந்தகோயிலில், கன்யாமாத விரத பூா்த்தி வைபவத்தை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை ஸ்ரீகல்யான சீனிவாச பெருமாளுக்கு 7ஆயிரம் லட்டுகள் படைக்கப்பட்டு மாகாண்யம் ஸ்ரீஸ்ரீ முரளிதர சுவாமியின் சீடா்பம்மல் பாலாஜி தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துக்கொண்டு ஸ்ரீகல்யாணசீனிவாச பெருமாளை வழிபட்டு சென்றனா். இதையடுத்து நாளை சனிக்கிழமை புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீகல்யாண சீனிவாச பெருமாளுக்கு காலை அன்னக்கூட உற்சவமும், அகண்ட தீப வழிபாடு மற்றும் கூட்டுப்பிராா்தனை நடைபெற உள்ளது.